April 6, 2008

என் குட்டியின் சுட்டித்தனம்..


"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை என்பவற்றை அடிக்கடி விமர்சிப்பான். தாய்க்கு "ஐஷ் " அடிப்பது அவனுக்கு கை வந்த காரியம். " அம்மா, இந்த dress இல் actress மாதிரி இருக்கிறீர்கள் என்பான்". ஆனால் அதே உடையுடன் ( சுரிதார்) தாய் பாடசாலைக்கு அவனை அழைக்க சென்றால் அவனுக்கு பிடிக்காதாம் ( நண்பர்கள் கேலி செய்வார்களாம்).

சற்று வயதுக்கு மிஞ்சிய வால்த்தனம் இருப்பதை அடிக்கடி அவதானித்திருக்கின்றேன். புத்தகம் வாசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விடயம். இந்த விடயத்தில் நானும் அவனுக்கு உற்சாகம் ஊட்டுவேன். கடையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கண்டால், உடனடியாக வேண்டித்தர வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டான். ஆனால் அதை தாயிடமோ அல்லது என்னிடமோ தனக்கு எம்மிடம் எப்போதாவது சந்தர்ப்பத்தில் சொல்லி வேண்டிக்கொள்வான். ஆனால் நாம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வான், ஆனால் "ஆம்" என்று சொல்லி விட்டு நாம் பின் வாங்க முடியாது.

அக்காவுடன் அடிக்கடி போட்டி போடுவான். காலையில் பல் விளக்குவதிலிருந்து, உடைத்தெரிவு எல்லாம் தானே செய்து கொள்வான். குழந்தைகளை சேர்த்து விளையாடுதல், பகிர்தல் போன்றவற்றில் தானாகவே முன் வந்து செய்வான்.

மகனுக்கு இந்த மாதம் பிறந்த நாள். தனது பிறந்த நாளுக்கு, நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றான். தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மூன்று வண்ணத்தாள்களை எடுத்து, " Party Things", " Games" , "My Friends" என்று தலைப்பிட்டு தனக்கு தேவையானவற்றை தயார் படுத்தி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். உதாரணமாக, "Musical Chairs" விளையாட்டிற்கு, நான் தமிழ் பாட்டு போடக்கூடாது, "High School Musicals" இலிருந்து போடவேண்டுமாம். ஏன் என்று வினவியதற்கு, என் நண்பர்கள் வேறு இனத்தவர்கள், அவர்களுக்கும் புரிகின்ற இசையாக இருக்க வேண்டாம்.



அம்மாவிற்கு, தமிழ் பிள்ளைகளை மாத்திரம் அழைத்து பிறந்த நாளை நடத்த விருப்பம். அதை தாய் சொல்ல, " மற்ற நண்பர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று அறிவுரை சொன்னான்". அம்மாமார் நாங்கள் சொன்னால் கேட்கினோமோ இல்லையோ, மகன் சொன்னால் கேட்பினம் தானே.

நாம் வாழ்க்கையில் எப்படியான கஷ்டங்களை எந்த வடிவத்திலும் ( ஏமாற்றம், இழப்புக்கள், புறக்கணிப்புக்கள், அவமானம்) வந்தாலும் இந்த குழந்தைகள் நொடிப்பொழுதில் மறக்க வைத்துவிடுவார்கள்.

குழந்தைகள் சுயாதீனமாகவும், நமக்காக மட்டும் உலகம் என்று இல்லாமல், நாமும் உலகத்தில் ஒரு பங்கு என்று வளர்வார்களாயின் அது அவர்களை சமுதாயத்தில் சுய கௌரவத்துடன் நல்ல பிரஜைகளாக வாழ வழி வகுக்கும்.

Read more...

March 23, 2008

படம் காட்ட....


படம் எடுப்பது எனது பொழுது போக்கு, இதனை ஒரு புதிய தளமாக அறியத்தருகின்றேன்.
எனது கமராவில் பிடித்த காட்சிகளை உங்கள் பார்வைக்காக கீழே உள்ள தளத்தில்.

எண்ணங்களின் வண்ணங்கள்

இது ஒரு ஆரம்பம் தான்.

Read more...

March 16, 2008

புற(க்)கணிப்புக்கள் ......



வாழ்வியலில் அன்றாடம் பல மனிதர்களுடன் பல மட்டங்களில் பழகுகின்றோம். மேற்குலகில் வாழுபுவர்கள் பல்வேறு மனிதர்களால், அவர்களின் புற கணிப்புகளினால் புறக்கணிக்கப்படுவதை பார்த்து, உணர்ந்து அறிந்திருப்போம். நாம் வந்தேறு குடிகள் என்பதால் சகிப்புத்தன்மையுடன் அதை அனுசரித்து வாழ பழகிவிடுகின்றோம். ஆனால் நம் நெருங்கிய உறவுகள் நம்மை புறக்கணிக்கும் போது அது வலியாகத் தெரிகின்றது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்..


cn_tower


படத்தை சிறிய அளவில் பார்த்தால் (CN TOWER) இல் வீதி விளக்கு இணைக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் இந்த வீதி விளக்கு கிட்டத்தட்ட 100 அடி தள்ளி இருக்கும் வீதிக்கம்பமும் விளக்கும். இதைப்போல் ஒருவரை பற்றிய புற கணிப்பை அவசர பட்டு கணித்து விடுவார்கள். ஓருசிலர் மற்றவர்களின் உந்துதால் தங்களை அறியாமலேயே ஒரு சிலரை புறக்கணித்து விடுகிறார்கள்.

எனக்கு ஒரு ஆசிரியர் சொன்னார் போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள வித்தியாசம்:

" போட்டி என்றால் நல்ல நிலையில் உள்ள ஓருவரின் நிலைக்கு நாம் செல்ல முயற்சிக்கும் உந்துதல், மாறாக பொறாமை என்பது நல்ல நிலையில் இருப்பவரை தன் நிலைக்கோ அல்லது அதன் கீழ் நிலைக்கோ கொண்டுவர நினைக்கும் மன உந்துதல்"

போட்டிக்கும் பொறாமைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் வாழுபவர்கள் பலர். பொறாமையின் அடிப்படையிலேயே மேற்குலகில் வாழ்போர் பலர் தம் உறவுகளை புறக்கணிக்கின்றார்கள். ஒரு சிலருக்கு ஒருவரிடம் நேரடியாக முரண்பட்டு கொள்ள முடியாதபோது இதற்காக இடையில் உள்ளவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் மூலம் முரண்பட்டு கொள்கின்றார்கள். அவர்களை இடையில் மாட்டிவிட்டு தாம் நல்ல பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ யாரையாவது புறக்கணித்திருக்கலாம். நாம் புறக்கணித்து விட்டோமோ என்று உணர்ந்தால் மனம் விட்டு உறவுடன் உரையாடுவதை விட தீர்வு எதுவும் இருந்து விடாது.

கவியரசு வைரமுத்து தன் தாயை பற்றி...,

முதன்முதலாய் அம்மாவிற்கு,
ஆயிரம் தான் கவி சொன்னாய்
அழகழகாய் பொய் சொன்னாய்
பெத்தவளே உன் பெருமை ஒற்றை வரி சொல்லலையே
காற்றெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதல்லையே

எழுதவோ படிக்கவோ ஏலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபம் என்று
எழுதாமல் போனேனோ


என்று தன் தாயை தான் புறக்கணித்து விட்டேனோ என எண்ணி வார்த்தைகளை வடித்திருக்கின்றார்.

தேவைகளுக்கு மாத்திரம் உறவுகள் என்று இல்லாமல், உறவுகளும் தேவை என்று எண்ணும் போது தான் அவசியமில்லாத புறக்கணிப்புக்கள் அகன்றுவிடும்.

பனைமரத்தின் கீழ் இருந்து பால் குடித்தால் "பார்ப்பவரின் தவறா அல்லது குடித்தவரின் தவறா?"

புற கணிப்பை பற்றியும் புறக்கணிப்பை பற்றியும் உங்கள் எண்ணங்களையும் தாருங்கள்.






Read more...

March 9, 2008

PIT ‍புகைப்படப்போட்டிக்காக (மார்ச்).


சிறிய மேசையில் ஒரு அறையின் பிரதிபலிப்பு


தலைப்பு உங்கள் பிரதிபலிப்புகளுக்கு...






Read more...

January 20, 2008

கஷ்டமான நாட்கள்...



தங்களை மறந்து எடுத்ததுக் கெல்லாம் ஆத்திரப் படுபவர்களை பார்த்திருப்பீர்கள். தங்களை கேட்க யாரும் இல்லை என்ற நினைப்போ அல்லது ஆத்திரத்தில் உடைத்தால் இழப்பு தங்களுக்கு இல்லை என்ற நினைப்போ எனக்கு தெரியாது. நானும் இப்படியான மனிதர்களால் இழப்படைந்திருக்கின்றேன். ஒரு நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்ற அலுவலக கடினமான நாள் சம்பந்தமான ஒரு வீடியோ கிளிப் போட்டிருக்கின்றேன்.

பார்த்து விமர்சியுங்கள்....








Read more...

January 14, 2008

வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....


மனித நாகரிகத்தில் சில பண்பாடுகள் அவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே ஆராயப்படும். தமிழர்களின் நன்றியுணர்வுக்கான ஒரு பண்டிகையே தைப்பொங்கல். சந்தோசத்தை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையே வாழ்த்துக்கள்.



இப்பண்டிகைகளில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்த்தி சொந்தம் கொண்டாடும் நடைமுறைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. ஒருவரை வாழ்த்துவதாக இருந்தால் நேரில் சென்று வாழ்த்துவது சிறந்தது. முடியாவிட்டால் தொலை பேசியில் அழைத்து வாழ்த்துவது நல்லது. இவை இரண்டுமே ஒருவரின் உரையாடலில் மற்றவரின் உணர்வுகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் வாழ்த்தும் போது அது கிடைத்ததா, அல்லது அவர் வாசித்தாரா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே அமைந்து விடும். ஆங்கிலத்தில் ( passive medium) பசிவ் மீடியம் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் நேரில் அழைத்து வாழ்த்த வாய்ப்புகள் இல்லை. மின்னஞ்சலில் வாழ்த்தும் போது

1. தனித்தனியே ஒவ்வொருக்கும் அனுப்புதல் சிறந்தது.
2. முடியாவிட்டால் வாழ்த்தும் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து வாழ்த்த வேண்டும்.

உதாரணமாக‌

To: Raymond, Smith, Pluto
எல்லோரையும் To: என்று முகவரியிட்டு வாழ்த்த வேண்டும். இல்லையேல் CC - Carbon Copy முறையில் வாழ்த்த வேண்டும் ( To or BCC இல்லாமல்). ஒரு சிலர் எல்லோரையும் BCC list இல் வாழ்த்துவார்கள்.

இதற்கு பதிலாக சிலர்,

To: Pluto
CC: Smith, Raymond
Sub: Happy Pongal

இப்படி வாழ்த்தும் போது, Pluto வை வாழ்த்துவதை Smith & Raymond இற்கு தெரிய வைப்பதாகவே அமையும்.

சந்தோசங்கள் பகிர்வதனால் பெருகும். உணர்வுடன் வாழ்த்துங்கள்!. வலய நட்புகளுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Read more...

January 1, 2008

புது வருடத்தில் விடியலை நோக்கி....


வருடங்கள் பல வந்து போயினும் உதிக்கின்ற புது வருடம் புத்துணர்வையும் பல விடயங்களுக்கு ஒரு விடிவையும் தேடி தரும் என்று நம்பி வலய உறவுகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்து, வழமை போல் எனது கிறுக்கலை தொடர்கின்றேன்.



கடந்து வந்த பாதையை சில கணங்களாவது எண்ணி பார்க்க முடிபவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாம் இன்று ஓரளவுக்காவது இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்றால் பலர் செய்து விட்ட தியாகங்கள் தான் காரணம்.

தியாகம் என்றால்,

எங்களை பற்றி சிந்திக்கின்ற தன்மையை குறைத்துக் கொண்டு, மற்றவர்களின் நன்மை கருதிய எண்ணங்களை மேலும் மேலும் வளர்த்து, எம்மை மற்றவர்களிற்கான‌ சேவையில் ஈடுபடுத்தி, எங்களிடம் இருப்பதில் மற்றவர்களுக்கு எங்கள் நேரத்தையோ, செல்வத்தையோ அல்லது வாழ்க்கையோ கொடுப்பது தான் தியாகம். முடியாவிட்டால், மற்றவர்களின் கஷ்டத்தில் ஒரு ஆறுதல் வார்த்தை, அல்லது ஒரு தோள் கொடுப்பு போன்றவையும் தியாகங்களே.

இப்படியான எண்ணக்கருக்களை நாம் வளர்த்துக் கொள்வதால் தான் பொதுச்சேவையில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்படியான பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களூக்கு புகழும் மதிப்பும் அவர்களை தேடிவரும். இப்படியானவை சுய நலவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையினாலும் தங்கள் இயலாமையினாலும் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களின் மனதை காயப் படுத்துவதே இச் சுய நலவாதிகளின் முனைப்பாக இருக்கும்.

இதனால், இந்த சுய நலவாதிகள் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களின் நெருங்கிய உறவுகளை அணுகி, அவர்களை தங்கள் பகடை வார்த்தையில் நம்ப வைத்து ( தாங்கள் மற்றவர்களின் நலத்தில் அக்கறை கொள்வதாக நம்ப வைத்து விடுவார்கள்‍ ‍ _ இதை பொது நலம் என்று சிலர் நம்பி விடுகின்றார்கள்) ஏமாற்றி விடுகின்றார்கள். அடிக்கடி வீடுகளில் மனவிமார் சொல்லுவார்கள் " ஊருக்கு உதவுபவன் வீட்டுக்கு உதவ மாட்டான்". இது யாரும் ஞானியோ, யோகியோ சொல்லி விட்ட சித்தார்ந்தம் அல்ல, சுய நலவாதிகளால் மற்றவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்குவதற்கு கூறப்பட்ட மந்திரமே இது.

ஈழத்தில் தம்முயிரை தியாகம் செய்யும் எம் வீர மறவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏது? நாமும் இந்த வாழ்வியலில் பங்காளர்கள், எமது கடமையை நாம் செய்ய தவறக்கூடாது. நாமும் பொது நலத்தில் ஈடுபடுகின்ற போது தான் எமக்கான விடியல் கிடைக்கும். நான் பெரியவன், நீ சிறியவன் என்ற அகந்தைகளை விட்டு உறவுகளுடன் மனம் விட்டு உரையாடி சந்தோசமாக ஒரு புதிய வேகத்துடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்.




Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP