January 1, 2008

புது வருடத்தில் விடியலை நோக்கி....


வருடங்கள் பல வந்து போயினும் உதிக்கின்ற புது வருடம் புத்துணர்வையும் பல விடயங்களுக்கு ஒரு விடிவையும் தேடி தரும் என்று நம்பி வலய உறவுகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்து, வழமை போல் எனது கிறுக்கலை தொடர்கின்றேன்.



கடந்து வந்த பாதையை சில கணங்களாவது எண்ணி பார்க்க முடிபவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாம் இன்று ஓரளவுக்காவது இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்றால் பலர் செய்து விட்ட தியாகங்கள் தான் காரணம்.

தியாகம் என்றால்,

எங்களை பற்றி சிந்திக்கின்ற தன்மையை குறைத்துக் கொண்டு, மற்றவர்களின் நன்மை கருதிய எண்ணங்களை மேலும் மேலும் வளர்த்து, எம்மை மற்றவர்களிற்கான‌ சேவையில் ஈடுபடுத்தி, எங்களிடம் இருப்பதில் மற்றவர்களுக்கு எங்கள் நேரத்தையோ, செல்வத்தையோ அல்லது வாழ்க்கையோ கொடுப்பது தான் தியாகம். முடியாவிட்டால், மற்றவர்களின் கஷ்டத்தில் ஒரு ஆறுதல் வார்த்தை, அல்லது ஒரு தோள் கொடுப்பு போன்றவையும் தியாகங்களே.

இப்படியான எண்ணக்கருக்களை நாம் வளர்த்துக் கொள்வதால் தான் பொதுச்சேவையில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்படியான பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களூக்கு புகழும் மதிப்பும் அவர்களை தேடிவரும். இப்படியானவை சுய நலவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையினாலும் தங்கள் இயலாமையினாலும் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களின் மனதை காயப் படுத்துவதே இச் சுய நலவாதிகளின் முனைப்பாக இருக்கும்.

இதனால், இந்த சுய நலவாதிகள் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களின் நெருங்கிய உறவுகளை அணுகி, அவர்களை தங்கள் பகடை வார்த்தையில் நம்ப வைத்து ( தாங்கள் மற்றவர்களின் நலத்தில் அக்கறை கொள்வதாக நம்ப வைத்து விடுவார்கள்‍ ‍ _ இதை பொது நலம் என்று சிலர் நம்பி விடுகின்றார்கள்) ஏமாற்றி விடுகின்றார்கள். அடிக்கடி வீடுகளில் மனவிமார் சொல்லுவார்கள் " ஊருக்கு உதவுபவன் வீட்டுக்கு உதவ மாட்டான்". இது யாரும் ஞானியோ, யோகியோ சொல்லி விட்ட சித்தார்ந்தம் அல்ல, சுய நலவாதிகளால் மற்றவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்குவதற்கு கூறப்பட்ட மந்திரமே இது.

ஈழத்தில் தம்முயிரை தியாகம் செய்யும் எம் வீர மறவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏது? நாமும் இந்த வாழ்வியலில் பங்காளர்கள், எமது கடமையை நாம் செய்ய தவறக்கூடாது. நாமும் பொது நலத்தில் ஈடுபடுகின்ற போது தான் எமக்கான விடியல் கிடைக்கும். நான் பெரியவன், நீ சிறியவன் என்ற அகந்தைகளை விட்டு உறவுகளுடன் மனம் விட்டு உரையாடி சந்தோசமாக ஒரு புதிய வேகத்துடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்.




2 comments:

மே. இசக்கிமுத்து 5:46 AM  

அகந்தை அகன்றுவிட்டால் அகிலம் மகிழ்ச்சியில் வளர்ந்திடும் என்பதில் ஐயமில்லை!!

நல்ல சிந்தனை!!

காரூரன் 8:13 PM  

இசக்கிமுத்து,
தங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP