வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....
மனித நாகரிகத்தில் சில பண்பாடுகள் அவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே ஆராயப்படும். தமிழர்களின் நன்றியுணர்வுக்கான ஒரு பண்டிகையே தைப்பொங்கல். சந்தோசத்தை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையே வாழ்த்துக்கள்.
இப்பண்டிகைகளில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்த்தி சொந்தம் கொண்டாடும் நடைமுறைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. ஒருவரை வாழ்த்துவதாக இருந்தால் நேரில் சென்று வாழ்த்துவது சிறந்தது. முடியாவிட்டால் தொலை பேசியில் அழைத்து வாழ்த்துவது நல்லது. இவை இரண்டுமே ஒருவரின் உரையாடலில் மற்றவரின் உணர்வுகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் வாழ்த்தும் போது அது கிடைத்ததா, அல்லது அவர் வாசித்தாரா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே அமைந்து விடும். ஆங்கிலத்தில் ( passive medium) பசிவ் மீடியம் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் நேரில் அழைத்து வாழ்த்த வாய்ப்புகள் இல்லை. மின்னஞ்சலில் வாழ்த்தும் போது
1. தனித்தனியே ஒவ்வொருக்கும் அனுப்புதல் சிறந்தது.
2. முடியாவிட்டால் வாழ்த்தும் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து வாழ்த்த வேண்டும்.
உதாரணமாக
To: Raymond, Smith, Pluto
எல்லோரையும் To: என்று முகவரியிட்டு வாழ்த்த வேண்டும். இல்லையேல் CC - Carbon Copy முறையில் வாழ்த்த வேண்டும் ( To or BCC இல்லாமல்). ஒரு சிலர் எல்லோரையும் BCC list இல் வாழ்த்துவார்கள்.
இதற்கு பதிலாக சிலர்,
To: Pluto
CC: Smith, Raymond
Sub: Happy Pongal
இப்படி வாழ்த்தும் போது, Pluto வை வாழ்த்துவதை Smith & Raymond இற்கு தெரிய வைப்பதாகவே அமையும்.
சந்தோசங்கள் பகிர்வதனால் பெருகும். உணர்வுடன் வாழ்த்துங்கள்!. வலய நட்புகளுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


