May 23, 2010

நீதி கேட்டு நிற்கும் சுரேசுக்கு உதவுங்கள்!


Suresh

தமிழனுக்கு அடையாளம் தந்த தானத் தலைவன் பிறந்த மண்ணில் பிறந்து, சிறிய வயதில் இராணுவக் கொடுமைகளால் பாதிக்கப் பட்டு, மற்றவர்களின் கஸ்டங்களை உணர்ந்து வளர்ந்தவன் இவன். பெற்றோருடன் புலம் பெயர்ந்து , கனடிய மண்ணில் தான் சாதிக்க வேண்டும் என்று கல்வியிலும் பொதுத் தொண்டுகளிலும் தன் ஆர்வத்தை காட்டினான். பாடசாலை நாட்களில் ஆசிரியர்கள் போற்றும் முதன்மை மாணவனாகத் திகழ்ந்தான்.

கனடாவில் புகழ்பெற்ற வாட்டலூ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் இளமானி பட்டத்தையும் , 2008 இல் வில்வெர்ட் லோறியர் பல்கலைக் கழகத்தில் கலைத்துறைப் பட்டத்தையும்(B.A.), அதன் பின் அதே பலகலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும்(MBA) பெற்றுக் கொண்டான்.


Microsoft,RIM, Amazon,NVIDI போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணி புரிந்தார்.

2004 ஆம் ஆண்டில் ஈழம் செல்லும் ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது. அங்கு வாழும் சிறுவர்களின் வாழ்வியியல் இவனை மிகவும் பாதித்திருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மறக்காமல் அதற்கான உதவிகளையும் செய்தான். வன்னிடெக் என்று ஈழத்தில் எடுக்கப் பட்ட முயற்சிகளுக்கு கணினி, தொழில் நுட்பம் தந்து உதவினான். சுனாமியின் போது அங்கு சென்று உதவிகள் செய்தான்

சுனாமியின் போது


ஈழத்தில் குழந்தைகளுடன்.


21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய காவல் துறையினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கனடாவில் இவரை கைது செய்தது. தடை செய்யப் பட்ட ஓர் பயங்கார அமைப்பிற்கு ( தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பது தான் இவர் மீதுள்ள குற்றச் சாட்டு. ஆயினும் இந்தப் பொழுதில் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடைப்பட்ட இயக்கம் அல்ல. கனடிய காவல் துறையினர் கனடிய சட்டத்தின் கீழ் எந்த வொரு வழக்கையும் தொடரவில்லை. ஆயினும் அமெரிக்க அரசினால் தொடங்கப் பட்ட வழக்கு தொடர்பாகவே இவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை கனடாவில் வைத்து விசாரிக்கும் படி பல முறை விண்ணப்பியிருந்தார். இவரின் கல்வித் தகமை அடிப்படையிலும் நன்னடத்தை அடிப்படையிலும் பிணையில் வெளியே வர அனுமதித்தது. ஆயினும், வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு வேலை தர எந்த நிறுவனங்களும் முன் வரவில்லை. இவர் குடும்பம் , இவரது வழக்கு தொடர்பாக நிதி நிலையில் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளார்கள்.

இவருக்கு புகழ் பெற்ற, அனுபவம் கொண்ட சட்ட வல்லுனர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

Bruce Fein - Suresh Legal Team

இவருக்கு உறுதுணையாக இருக்கும் உறவுகளும் நட்புகளும்.

அவனது குடும்பம்


Family and Friends - Justice for Suresh Team


இந்த துடிப்பான இளையனின் மேல் தொடரப் பட்ட வழக்கு ஒரு இனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறிக்காக்கும் ஒரு முயற்சியாக அமைந்து விடக் கூடாது. உலகளாக ரீதியில் முன் வந்து, இதை வெற்றி கொண்டு, இப்படியான நிலைமைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.

இவ்வளவு சிக்கல்களின் மத்தியிலும் நிதானமாக எல்லோரையும் இன் முகத்துடன் நடத்தும் இச்சகோதரனுக்கு எல்லோரும் உதவ முன் வரவேண்டும். சிறு துளி பெரு வெள்ளம்.

நீங்கள் உதவ விரும்பினால், உங்கள் காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி.

Justice for Suresh

38064- 256 King St. North,
Waterloo, Ontario N2J 2Y9
Canada.

For Additional Information

A9 Memories.com
Justice for Suresh




Read more...

September 24, 2009

வலையில் ஓர் உலா...

நீண்ட நாட்களின் பின் மீண்டும் புளொக் மூலம் புலம்பலாம் என்று வந்திருக்கிறன். ஓரளவுக்கு அங்கும் இங்கும் நுனிப்புல் மேய்ந்திருக்கின்றேன். ஈழத்தவரின் அரசியல் சார்ந்த சூழல் நம்மில் பலருக்கும், எமது போராட்டம் கலந்த தகவல்களுக்கே ஓரளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. பல முறை எழுத வேண்டும் என்று எண்ணி அமர்ந்து விட்டு நிறுத்தி விடுகின்ற ஒரு மனோ நிலை கொஞ்ச நாட்களாக இருந்து வருகின்றது. ஆயினும் மற்றவர்களின் எழுத்துக்களை ஓரளவு வாசிப்பதுண்டு.




ஆரம்ப கால கட்டங்களில் இது ஒரு சமூக வலையாக அவர் தம் அங்கலாய்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்கின்ற ஒரு ஊடகமாகவே தென் பட்டது. என் முன் தெரிகின்ற பல விடயங்களை மேற்குலகில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு தமிழ் பேசும் எம்மவர் பார்வையில் எப்படி வித்தியாசப்படுகின்றது அது ஏன் என்ற வினாக்களை அவ்வப்போது எனக்குள் எழுப்புவதுண்டு. இதை விமர்சனங்களின் விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட ஒருவரின் விசனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் தகவல் உலகத்தில் வாழுகின்றோம். தகவல் என்பது ஒழுங்குபடுத்தபட்ட தரவுகளின் கோர்வை. நம்மவர் மத்தியில் பல திரட்டிகள் இருக்கின்றன. இவற்றை பாவிப்பதற்கான இலகுத்தன்மை இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. வலைப்பதிவு தொடர்பாக உதவி பெற்றுக் கொள்வதில் இன்றும் இன்னமும் சிரமம் இருக்கத் தான் செய்கின்றது. பல சுவாரசியமான வலைக்கு வந்த கதைகளை வாசித்திருக்கின்றேன். அனேகமானவர்களின் பதிவில் முகம் தெரியாத பிற தேசத்தில் வாழுபவரிடம் தான் உதவி பெற்று வலைக்கு வந்ததாக எழுதியுள்ளார்கள். நமக்கென்று ஒரு "வலையில் எழுத டம்மீஸ் புக்" என்று ஏன் தயாரிக்கக் கூடாது.

* புலொக் என்றால் என்ன?
* எப்படி பதிவு செய்வது?
* தமிழில் எப்படி தகவல்களை தட்டச்சு செய்வது?
* நீங்கள் எழுதியதை எப்படி மற்றவர்கள் வாசிக்க வைக்கலாம்?
* திரட்டிகளும் பயன்பாடும்.
* பின்னூட்டங்களும் அதன் கையாளுகையும்
* ஒலி, ஒளி வடிவம் இணைத்தல்
* மேம்படுத்தல்

இப்படியான தகவல்களை ஒரு கோர்வையாக ஒரு புலொக் வடிவத்திலோ அல்லது pdf வடிவத்திலேயே செய்தால் புது முகங்களை உள்வாங்கவும் எமக்குள் திறந்த மனப்பான்மையை வளர்க்கும். அடடா நான் அறிவுரை கூற மட்டும் இப்பதிவை எழுதவில்லை. இது பற்றிய தகவல்கள் பலரால் பாகம் பாகமாய் அங்கும் இங்குமாக இருக்கின்றது. பதிவர் வட்டங்கள் பல இருக்கின்றன. இந்த முயற்சி புலொக் எழுதும் எல்லா தமிழ் எழுத்தாளர்களின் கருத்தையும் உள்வாங்க உதவும் என்பது ஒரு கணிப்பு.

பதிவர் வட்டங்கள் எவை? அவற்றை தொடர்பு கொள்ள என்ன தொடர்பு முகவரி? போன்ற விடயங்களை சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியமான விடயங்களை முயற்சிக்கலாம். இப்படி ஒரு கைக்கடக்கமான ஒரு கை நூல் வலைப்பக்கத்தில் இருக்கும் போது எல்லோரின் இணையப் பக்கங்களிலும் " நீங்களும் பதிய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பெட்டிக்குள் இருந்து சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் பெட்டிக்கு வெளியேயும் நின்று சிந்திக்க வேண்டும் என்பது என் அவா! அறிமுகமில்லாத அகதியின் புலொக்கிலிருந்து அறிவுமுகம் என்று சொல்லி என் கிறுக்கல்களை கொட்டியிருக்கின்றேன். எனது கிறுக்கல்கள் எந்தவித கீறல்களையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பி உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களையும் வேண்டி நிற்கின்றேன்




Read more...

June 5, 2009

உணர்வு பூர்வமாகவா அறிவுபூர்வமாகவா சிந்திக்கும் நேரம் இது?







புலம் பெயர்ந்த மக்களிடையே ஒருமித்த கருத்தையும் செயற்பாட்டையும் ஏற்படுத்த பலரும் முயற்சிக்கின்ற இந்த வேளையில், ஒரு சிலரின் தனிப்பட்ட நோக்கங்கள் கொண்ட அல்லது தலைமைத்துவ சிந்தனைகள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றது. பல ஆண்டுகளாக பல மாவீரர்களின் அர்ப்பணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வேட்கையை அணையாது தொடர்ந்து, எமது தமிழீழத் தாயகத்திற்கான முன்னெடுத்துச் செல்லவேண்டியது நம் எல்லோரின் கடமை.

நாம் பல்லாயிரக் கணக்கான மக்களை சிங்கள அரசின் இனச் சுத்திகரிப்பினால் இழந்தும், 300,000 மக்களை வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத அனாதைகளாகவும், 13,000 மேற்பட்டோர் முகாம்களிலிருந்து கடத்தப்பட்டு அவர்களின் நிலை தெரியாத நிலையிலும் மிக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் அவசரமானது எது?, அவசியமானது எது? என்று பிரித்தறியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவசியமானவை யாவும் அவசரமானது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் எம்மக்களுக்கு ஒரு உடன் விடிவாக அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள், சுயாதீனமாக சொந்த இடங்களில் சென்று வாழ வழி செய்யவேண்டும்.

இந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நமக்கு வெளி நாட்டு அரசுகளினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் எமக்குச் சார்பான நிலைய ஏற்படுத்த வேண்டும். ஓர் அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையத் தவிர்த்து உலகளாவிய தமிழ் மக்களின் ஒருமித்த ஒரு நிலைப்பாடு உருவாக்கப் பட வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உடனடி நிவாரணம் சேர நாம் உழைக்க வேண்டும். இந்த உடனடித் தேவைக்காக நாம் உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும்.

முன்னுதராணாமாக பல தமிழ் தலைமைகள் செயற்பட்டாலும், பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஈடாக, கூடிய புலம் பெயர் தமிழர் வாழும் கனடாவில் முன்னெடுக்க முடியவில்லை என்ற ஒரு குறைப்பாடும் விளங்குகின்றது. நம் மக்களை தலைமைப்படுத்த முயற்சிப்பவர்கள் மக்களை பிரித்தாள முயற்சிக்கக்கூடாது.

புலம்பெயர் நாடுகளில் தலைமைப் படுத்த முயற்சிப்பவர்கள்,

1. புலம் பெயர் நாட்டின் தேசிய மொழியிலும், நாட்டு அரசியல் பின்னணிகள், அரசியல் தலைவர்கள் முன்பு கூறிய கருத்துக்கள், இன்றைய நிலைப்பாடு, ஊடகங்களை கையாளக் கூடிய தன்மை போன்றவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2. எந்த நேரத்திலும் ஊடகங்களோ, அரசியல் பிரமுகர்களோ, தொண்டு நிறுவனங்களோ தொடர்பு கொள்ளக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
3. தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு சட்ட திட்டங்களினால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும்.
4. தனிமனித அடையாளத்தை முன்னிறுத்தாமல், எம் மக்களின் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும்.

மேற்பட்ட கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கும் போது உள்ளூர் தலைமைகளில் எந்த குழப்பமும் ஏற்படாது. எம் தமிழ் இனத்தைச் சார்ந்து அரசியல் பிரதி நிதித்துவம் செய்யும் அரசியல் வாதிகள் இலங்கை, இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இரா. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு எம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்கள். அவர்களுடைய ஆரோக்கியமான கருத்துக்களை புலம் பெயர் நாட்டிலுள்ள் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். புலம் பெயர் மக்களின் அழுத்தம், இலங்கையில் வாழும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதி நிதிகளை வெளி நாட்டு அதிகாரிகள் யார் சென்றாலும் சந்திக்கும் வகையில் எங்களுடைய அழுத்தங்கள் இருக்க வேண்டும்.

உலகளாவிய அளவில் ஒருமித்த போராட்டமே எம் இலக்கை இலகுவாக அடைய வழி சமைக்கும். வெறும் உணர்வு பூர்வமாக சிந்தித்து மட்டும் நாம் நம் இலக்கை அடைந்து விட முடியாது. அறிவுபூர்வமாகவும் எம் சிந்தனை அமைய வேண்டும். எந்த குறிக்கோளும் இல்லாமல் ஒரு சிலரை வால் பிடிக்கும் தன்மை தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும். தியாகி என்றோ, துரோகி என்றோ நம் தேவைகளுக்காக யாரையும் அடையாளப் படுத்த முயற்சிக்காமல், எம் மக்களின் உடனடித் தேவைகளுக்கு விடிவு தேடுவதுடன் எம் தமிழீழத் தாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

கீழே தரப்பட்டுள்ள "தமிழீழமே தாகம்" நிகழ்வு காணொளியில் இணைக்கப்பட்டுள்ள‌ பாடல் வரிகளைக் கேளுங்கள். ( நன்றி - நினைவுகள்.கொம்)
இப் பாடல் வரிகள் பல யதார்த்த நினைவுகளை அசைய வைத்து எங்களை ஒற்றுமைப் படுத்தும் என்று நம்புகின்றேன். உங்கள் கருத்தையும் பகிர்ந்து செல்லுங்கள்.



Read more...

May 29, 2009

எம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா?


உறவுகளை இழந்த வலியில் எம்மினம் என்ன செய்வதென்று அறியாத நிலையில், யாருக்கு யார் ஆறுதல் சொல்வது! புலம் பெயர் நாடெல்லாம் வீதி வீதியாய் போராட்டம் செய்தோம், பாராளுமன்றங்களை முற்றுகையிட்டு மன்றாடினோம். கை கொடுக்க யாருமில்லாமல் கடைசி நிமிடம் வரை நம்மை உலகம் காக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கொடூரமாக கொல்லப்பட்ட சொந்தங்களுக்காக நாம் என்ன செய்தோம், செய்கின்றோம் என்பது தான் இன்று நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம்.

இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சர்வதேசத்தில் எவ்வளவு குழப்பங்கள். மனித உரிமை நிறுவனங்கள் என்ற பேரில் மனித அவலத்தை கண்டு கொள்ளாத மனிதர்கள். 21ம் நூற்றாண்டில் மனிதம் செத்து விட்டதா? அழுகின்ற நேரமா அல்லது எழுகின்ற நேரமா? யார் உயிருடன் உள்ளார்கள், யார் இல்லை என்ற பல கேள்விகள்.

நாம் மௌனிக்கின்ற நேரமில்லை. உலகத்தில் எல்லா மூலையில் உள்ள தமிழனும் ஒற்றுமையாக செயற்பட்டு, கண்மூடித்தனமாக இருந்த உலகப் பொது அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கும் வரையும் ஓயக் கூடாது. பான் கீ மூனுக்கு 20,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் தெரிந்தும் மௌனமாக இலங்கை சென்று அங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்ததிற்கான தடயம் இல்லை என்கின்றார். இவர்கள் எல்லாம் எப்படி ஒரு மனிதாபிமான அமைப்பில் உயர் பதிவியில் இருக்கமுடியும்?

இந்த காணொளி கனடிய மக்களின் உள்ளக் குமுறலை எடுத்து வருகின்றது.




ஓயாமல் தினமும் உழைப்போம். இந்த மனித அவலத்திற்கு துணை போனவர்கள் யார் என்றாலும் அவர்களை மனித நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து போராடுவோம்.


Read more...

May 2, 2009

கனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.


உலகலகளாக ரீதியாக தமிழ் மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்களில் பல சவால்களை இந்த இளையோர் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. அவர்களுக்கு பலமாக இருக்க வேண்டிய கடமைப்பாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு.


மாணவர்களின் பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும். Canadian Tamil Students Interview.mp3 -






இந்த கனடிய இளையோரில் சிலரின் ஆதங்கத்தை ஒலிப்பதிவாக தொகுத்து இங்கு தந்துள்ளோம். இந்த பதிவு என்பது உங்கள் மனங்களோடு பேசுவதற்கான இவர்களுடைய சிறிய முயற்சி மட்டுமே. இவர்கள் எண்ணங்களை ஊக்குவிக்குமுகமாக தமிழ் வானொலிகள், இணயங்கள் இந்த ஒலிப்பதிவை உங்கள் ஊடகங்களில் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

Read more...

April 10, 2009

ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் ( சித்திரை 10)



மக்கள் அலை அலையாக வந்த வண்ணமாக உள்ளார்கள். எழுச்சிகரமாக கனடிய மக்களுக்கும் எம் மக்களின் நிலைப்பாட்டை தெரியவைத்து ஒரு போர் நிறுத்தத்தை வேண்டி நிற்கிறார்கள். சாய்ப்பிரியன் ஆரம்பித்து வைத்த நீராகரத்துடன் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் மேலும் நால்வர் இணைந்திருக்கின்றார்கள்.


உண்ணா நோன்பு செய்பவர்களின் உணர்வலைகள் இங்கே


Ottawa_fasting_interview_10_April.mp3 -

Read more...

April 8, 2009

தடை செய்யப்பட்ட விச வாய்வு ஆயுதங்களை கண்டிக்க ஒரு அரசும் இல்லையா?


U.N இனால் தடை செய்யப்பட்ட விச வாயு ஆயுதங்களை இலங்கை அரசு வன்னிப் போர் முனையில் உபயோகித்திருக்கின்றது. இது தொடர்பாக ஓர் ஆங்கிலச் சேவை எடுத்து வந்த காட்சி இங்கே. ஏனோ உலகத்தில் இந்த இரட்டை வேடம்.




Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP