January 20, 2008

கஷ்டமான நாட்கள்...



தங்களை மறந்து எடுத்ததுக் கெல்லாம் ஆத்திரப் படுபவர்களை பார்த்திருப்பீர்கள். தங்களை கேட்க யாரும் இல்லை என்ற நினைப்போ அல்லது ஆத்திரத்தில் உடைத்தால் இழப்பு தங்களுக்கு இல்லை என்ற நினைப்போ எனக்கு தெரியாது. நானும் இப்படியான மனிதர்களால் இழப்படைந்திருக்கின்றேன். ஒரு நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்ற அலுவலக கடினமான நாள் சம்பந்தமான ஒரு வீடியோ கிளிப் போட்டிருக்கின்றேன்.

பார்த்து விமர்சியுங்கள்....








Read more...

January 14, 2008

வாழ்த்துக்களும் நடைமுறைகளும்....


மனித நாகரிகத்தில் சில பண்பாடுகள் அவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே ஆராயப்படும். தமிழர்களின் நன்றியுணர்வுக்கான ஒரு பண்டிகையே தைப்பொங்கல். சந்தோசத்தை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையே வாழ்த்துக்கள்.



இப்பண்டிகைகளில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்த்தி சொந்தம் கொண்டாடும் நடைமுறைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. ஒருவரை வாழ்த்துவதாக இருந்தால் நேரில் சென்று வாழ்த்துவது சிறந்தது. முடியாவிட்டால் தொலை பேசியில் அழைத்து வாழ்த்துவது நல்லது. இவை இரண்டுமே ஒருவரின் உரையாடலில் மற்றவரின் உணர்வுகளை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் வாழ்த்தும் போது அது கிடைத்ததா, அல்லது அவர் வாசித்தாரா என்பது சில வேளைகளில் கேள்விக்குறியாகவே அமைந்து விடும். ஆங்கிலத்தில் ( passive medium) பசிவ் மீடியம் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் நேரில் அழைத்து வாழ்த்த வாய்ப்புகள் இல்லை. மின்னஞ்சலில் வாழ்த்தும் போது

1. தனித்தனியே ஒவ்வொருக்கும் அனுப்புதல் சிறந்தது.
2. முடியாவிட்டால் வாழ்த்தும் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து வாழ்த்த வேண்டும்.

உதாரணமாக‌

To: Raymond, Smith, Pluto
எல்லோரையும் To: என்று முகவரியிட்டு வாழ்த்த வேண்டும். இல்லையேல் CC - Carbon Copy முறையில் வாழ்த்த வேண்டும் ( To or BCC இல்லாமல்). ஒரு சிலர் எல்லோரையும் BCC list இல் வாழ்த்துவார்கள்.

இதற்கு பதிலாக சிலர்,

To: Pluto
CC: Smith, Raymond
Sub: Happy Pongal

இப்படி வாழ்த்தும் போது, Pluto வை வாழ்த்துவதை Smith & Raymond இற்கு தெரிய வைப்பதாகவே அமையும்.

சந்தோசங்கள் பகிர்வதனால் பெருகும். உணர்வுடன் வாழ்த்துங்கள்!. வலய நட்புகளுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Read more...

January 1, 2008

புது வருடத்தில் விடியலை நோக்கி....


வருடங்கள் பல வந்து போயினும் உதிக்கின்ற புது வருடம் புத்துணர்வையும் பல விடயங்களுக்கு ஒரு விடிவையும் தேடி தரும் என்று நம்பி வலய உறவுகளுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்து, வழமை போல் எனது கிறுக்கலை தொடர்கின்றேன்.



கடந்து வந்த பாதையை சில கணங்களாவது எண்ணி பார்க்க முடிபவர்களால் தான் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாம் இன்று ஓரளவுக்காவது இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் என்றால் பலர் செய்து விட்ட தியாகங்கள் தான் காரணம்.

தியாகம் என்றால்,

எங்களை பற்றி சிந்திக்கின்ற தன்மையை குறைத்துக் கொண்டு, மற்றவர்களின் நன்மை கருதிய எண்ணங்களை மேலும் மேலும் வளர்த்து, எம்மை மற்றவர்களிற்கான‌ சேவையில் ஈடுபடுத்தி, எங்களிடம் இருப்பதில் மற்றவர்களுக்கு எங்கள் நேரத்தையோ, செல்வத்தையோ அல்லது வாழ்க்கையோ கொடுப்பது தான் தியாகம். முடியாவிட்டால், மற்றவர்களின் கஷ்டத்தில் ஒரு ஆறுதல் வார்த்தை, அல்லது ஒரு தோள் கொடுப்பு போன்றவையும் தியாகங்களே.

இப்படியான எண்ணக்கருக்களை நாம் வளர்த்துக் கொள்வதால் தான் பொதுச்சேவையில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்படியான பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களூக்கு புகழும் மதிப்பும் அவர்களை தேடிவரும். இப்படியானவை சுய நலவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையினாலும் தங்கள் இயலாமையினாலும் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களின் மனதை காயப் படுத்துவதே இச் சுய நலவாதிகளின் முனைப்பாக இருக்கும்.

இதனால், இந்த சுய நலவாதிகள் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களின் நெருங்கிய உறவுகளை அணுகி, அவர்களை தங்கள் பகடை வார்த்தையில் நம்ப வைத்து ( தாங்கள் மற்றவர்களின் நலத்தில் அக்கறை கொள்வதாக நம்ப வைத்து விடுவார்கள்‍ ‍ _ இதை பொது நலம் என்று சிலர் நம்பி விடுகின்றார்கள்) ஏமாற்றி விடுகின்றார்கள். அடிக்கடி வீடுகளில் மனவிமார் சொல்லுவார்கள் " ஊருக்கு உதவுபவன் வீட்டுக்கு உதவ மாட்டான்". இது யாரும் ஞானியோ, யோகியோ சொல்லி விட்ட சித்தார்ந்தம் அல்ல, சுய நலவாதிகளால் மற்றவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்குவதற்கு கூறப்பட்ட மந்திரமே இது.

ஈழத்தில் தம்முயிரை தியாகம் செய்யும் எம் வீர மறவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏது? நாமும் இந்த வாழ்வியலில் பங்காளர்கள், எமது கடமையை நாம் செய்ய தவறக்கூடாது. நாமும் பொது நலத்தில் ஈடுபடுகின்ற போது தான் எமக்கான விடியல் கிடைக்கும். நான் பெரியவன், நீ சிறியவன் என்ற அகந்தைகளை விட்டு உறவுகளுடன் மனம் விட்டு உரையாடி சந்தோசமாக ஒரு புதிய வேகத்துடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்.




Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP