November 28, 2008

மாவீரர் வாரம் - கனடா



புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் ஒரு முக்கிய நாடான கனடாவில் பல தடைகளின் மத்தியிலும் மிகவும் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப் படுகின்றன. இங்கு வாழும் இளையவர்கள் பல நெருக்கடியில் மத்தியில், சட்ட வல்லுனர்களின் அனுகூலத்தை பெற்று நடத்த எடுத்த கொண்ட இடத்தில் எல்லா பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்தாகி விட்ட வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த இளையோர் பாரட்டப் பட வேண்டியவர்கள்!



வருடா வருடம் கார்த்திகை 27 நிகழ்வுகள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை வியம்பி நிற்கும் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. இந்த முறை நிகழ்வும் மிகவும் எழுச்சியாகவும், அலை கடலாய் மக்கள் கூட்டம் காலை 6:00 மணியிலிருந்து கலந்து கொண்டார்கள். பல மக்கள் மண்டபம் நிரம்பி திரும்பி செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். வாகனத்தரிப்புக்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கைக்குழந்தைகளுடனும், தள்ளாடும் வயதில் முதியோரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருந்தனர்.




மறைமுக காவல் துறையினரின் நடமாட்டம் சற்று அதிக‌மாகவே இருந்தது. அவர்களும் தகவல் சேகரிக்கும் முயற்சியிலும் தம் தேவைகளுக்கு ஆவணப்படுத்துதலிலும் ஆங்காங்கே முயன்ற வண்ணம் இருந்தார்கள். இது தொடர்பாக துடுப்பான இளைஞர் ஒருவரிடம் வேற்றினத்தவரின் கலந்துரையாடிய போது ( கேட்ட சம்பவம்)

வேற்றினத்தவர்: எங்கு செல்கிறீர்கள்?

இளைஞன்: மாவீரர் நாளுக்கு

வேற்றினத்தவர் : எப்படி இது நடக்கின்றது என்று உமக்கு தெரிந்தது?, யாராவது அழைத்துச் சொன்னார்களா?

இளைஞன்: எனக்கு ஒருவரும் அழைத்து சொல்லவில்லை, கார்த்திகை 27 என்றால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். இதற்காக நான் காத்திருந்தேன்.

வேற்றினத்தவர்: இங்கு யாராவது பணம் சேகரிக்கின்றார்களா?

இளைஞன்: எனக்கு தெரியாது, நான் என் நாட்டில் கஷ்ட்ப்படும் மக்களுக்கு கொடுக்க
விரும்புகின்றேன், உங்களுக்குத் தெரியுமா?

வேற்றினத்தவர்: இந்த நிக்ழ்ச்சியை நடத்துபவர் யார்?

இளைஞன்: எனக்குத் தெரியாது, அதை அறியத்தான் நீங்கள் வந்திருந்தால்
உள்ளே சென்று அறிந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லாத தகவல்.

வேற்றினத்தவர்: நீங்கள் போகலாம்.

எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் மன நிலை அங்கு வந்திருந்த வேற்றினத்தினருக்கும் நிச்சயமாக விளங்கியிருக்கும்.





நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தால் போல், "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா" என்ற நாட்டிய நாடக நிகழ்வு நடந்தது.



நிகழ்வின் இறுதி நிகழ்வாக மக்களின் மனதை உருக்கி ஈழத்தில் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மன நிலையயும், அவர்கள் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் தேவையை விளக்குமாக ஒரு எழுச்சி நாடகம் நடை பெற்றது.



உலகெல்லாம் நடந்த நிகழ்வுகளின் பெயர்கள் கொண்ட பதாதைகளுடன் இடம்பெயர்ந்தோருக்கு கைகொடுப்பதாக சித்தரித்திருந்தார்கள்.



போராளிகள் பூட்டை உடைக்க பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கைகொடுக்க விடுதலை என்ற கதவு திறக்க ஈழ மாதா தோன்றுகின்றாள்.



மக்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றார்கள்.



எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருந்தது. நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது.



மாவீரர் நிகழ்வு நினைவுப் படங்களை பார்க்க... ( நன்றி , நினைவுகள், செய்தி இணையம்)






Read more...

November 22, 2008

எந்த வயதில் வாழ்க்கைத் துணை தேட...



பதின்மர் வயதில் பருவ மிடுக்கில் கிடைத்த உறவு வாழ்க்கைத்துணையாகி விடுமா?
பள்ளிப் படிப்பில் பக்கத்தில் இருந்து பகிடி பண்ணியவன்(ள்) வாழ்க்கைத் துணையா?
கடைசி வாங்கில் களிசறை என்று வாத்தி கடிந்து கொண்டதால் கொண்ட அக்கறையால் கடைசி நாளில் காதலாகி வாழ்க்கைத் துணையாகுமா?
படிப்பேறாது என்று சொல்லி துடிப்போடு சொல்லி தந்த நட்பு வாழ்க்கைத் துணையாகுமா?
கண் காணா இடத்தில் இருந்து கணணி அரட்டை செய்தவன் வாழ்க்கைத் துணையாகுமா?

day2_london 549
வாழ்க்கைத் துணையாக இவன்/இவள் அமைந்து விடமாட்டார்களா என்று எம் வாழ்க்கைச் சக்கரத்தில் பல சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கின்றன. இதில் எந்த வயதில் எம் எண்ணங்களுக்கு நாமாகவே ஒரு வடிவம் கொடுக்க முயல்கின்றோமோ அப்போது தான் உதயமாவது காதல் என்கிறார்களோ! இந்த எண்ணங்கள் வடிவம் பெறாமலே அழிந்துவிடுவது தான் அதிகம். இதற்கு எம் குடும்ப அமைப்பு, நண்பர்கள் உறவுகளின் அனுபவங்கள் எங்கள் எண்ணங்களை பாதிக்கின்றன.எனக்கு தெரிந்த அனுபவங்கள் சிலவற்றை கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி தருகின்றேன்.

அகிலன் ஒரு பொறியியல் மாணவன், அவனைக் கண்டால் ஜொள்ளு விடாத கல்லூரி மாணவி கிடையாது. இவன் ஒரு முற்போக்கு சிந்தனையுடையவன். கடைத்தெருவிற்கு போனால் கல்யாணமான பெண்கள் கூட அவனை சுகம் விசாரிக்காமல் போவது கிடையாது. பெற்றோர் வாழ்க்கைத்துணை தேடுவதில் இவனுக்கு முழும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். நட்புகளுக்கு காதல் தூதுவனும் இவன் தான்.

ஆயினும் அகிலனுக்கு நிறைய தெரிவுகள் இருந்ததோ என்னவோ தனக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் குழப்பம் தான். அவன் அடிக்கடி விதவைக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்வான். அவனுடைய சகோதர சகோதரிகள் எல்லோரும் காதல் திருமணம் தான். காலங்கள் ஓடின, கல்லூரி வாழ்க்கை முடிந்தது. வேலை தேட சென்னை வந்து தங்கினான். உணவுக்காக ஒரு யாழ்ப்பாணத்து குடும்பத்தினரிடம் வந்து பணம் கொடுத்து சாப்பிட்டு வந்தான். சாப்பாடு செய்து கொடுத்த அன்ரிக்கு பெடியனை பிடித்துப் போட்டுது. தன் குடும்பத்திற்குள் மாப்பிள்ளையாக்க எண்ணி தனது லண்டனில் இருக்கும் மகளின் படத்தை காட்டி அகிலனிடம் விருப்பம் இருந்தால் சொல்லச் சொன்னார். பெண் அழகாய் இருந்ததாலும் அன்ரியின் பண்பு பிடித்திருந்ததால் அவனும் லண்டன் பிள்ளையுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாகச் சொன்னான்.

லண்டன் பிள்ளையுடன் பேசிய பின் திருப்திப் பட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் கல்யாணத்திற்கு உடன் பட்டான். அகிலனுக்கு புத்துணர்வு பிறந்து விட்டது. லண்டன் தொலைபேசி அழைப்பு வராதோ என்ற ஏக்கம் தான் எப்போதும், நாட்கள் செல்ல செல்ல லண்டன் மணமகள் அகிலனுடனான சம்பாசனை நேரத்தை குறைத்தாள். அகிலன் அழைத்தால் அவள் ஏதாவது நொண்டி சாட்டுச் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்த அகிலன் பேயறைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். நண்பர்களிடம் தன்னிலையை சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான். ஏன் அவளுடன் பேச வேண்டும் அவளுக்கு என்ன தான் தவறு செய்தேன் என்று என்னை புறக்கணிக்கின்றாள் என்பது அவனது புலம்பல். பெண்ணின் தாயாருடன் மனம் விட்டு பிரச்சனையை சொன்னான். தாய் மகளை தொலை பேசியில் அழைத்து என்னவென்று வினவ " சீதனம் இல்லாமல் ஒரு இஞ்சினியர் கல்யாணம் கட்ட வருவதால், அகிலனுக்கு ஆண்மை இல்லை என்று சொல்லிவிட்டாள்". தாய் ஆத்திரத்தில் போனை வைத்துவிட்டு " அவள் இனிமேல் எனக்கு பிள்ளை இல்லை தம்பி, உங்களைப் போய் தரக்குறைவாச் சொல்லிறாள், என்னை மன்னிச்சு போடுங்கோ, வெளி நாட்டுக்கு போய் அவள் இப்படி மாறுவாள் என்று எனக்குத் தெரியாது.

அகிலனின் நண்பர்கள் பெண்ணைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அவளுக்கு இலண்டனில் காதலன் ஒருவன் நீண்டகாலம் இருப்பதை. தனது காதலை மறைத்துக் கொண்டு இஞ்சினியர் மாப்பிள்ளை எடுக்க முற்பட்டு காதலினால் மனமாற்றப்பட்டு பின்பு பேசிய மாப்பிள்ளைக்கு டாட்டா காட்டிவிட்டாள்.

அகிலன் யாருக்கும் தீங்கு விளைவித்திருக்க மாட்டான். அவனுக்குள் ஒரு ஏமாற்றம். கல்லூரியில் எல்லோருக்கும் கதாநாயகனாக இருந்தவன் நிலை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. திருமணம் செயவது என்றால் சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்வதாக முடிவெடுத்தான். அதே மாதிரி சீதனம் வேண்டித்தான் திருமணம் செய்தான். ஒரு காலத்தில் சீதனம் வேண்டக் கூடாது, விதவைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்றவனின் வாழ்க்கைத் தெரிவு எப்படி மாறியது.

எந்த வயதில் காதலிப்பது என்பது முக்கியமல்ல, எந்தளவு புரிந்துணர்வு இருப்பதில் தான் தங்கியிருக்கின்றது. சின்ன வயதில் காதலிக்கும் போது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ குறுகிய தெரிவுகள் தான் கிடைக்கும், பின்னாளில் அந்த ஆணோ/ பெண்ணோ வெற்றி அடைவார்கள் என்று திட்ட வட்டமாக சொல்லி விடமுடியாது. ஆணோ பெண்ணோ வெற்றி பெற தவறினால் சில காதல்கள் முறிவடைந்து விடுகின்றன.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொன்னாலும் அனேகமாக ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப் படுகின்றன. கல்லூரி நாட்களில் கொண்டு திரிய பல காதல்கள் தோன்றினாலும், பண வருவாயை மனதில் வைத்து தான் இன்றைய அனேகமான வாழ்க்கைத் துணைகள் தேடப்படுகின்றன.

உங்களுடைய பார்வையையும் தாருங்கள்


Read more...

November 17, 2008

உணவுப் பொருட்களை உபயோகித்து உருவங்கள்.



கிறிஸ்மஸ் விடுமுறை காலங்களில் சேகரிக்கப்படும் உலர் உணவுகளை உபயோகித்து சில உருவங்கள் கீழே!

CAN Images


CAN Images2

CAN Images2


இதை அழுத்தவும் எல்லாப் படங்களையும் பார்க்க..."


Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP