November 28, 2008

மாவீரர் வாரம் - கனடா



புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் ஒரு முக்கிய நாடான கனடாவில் பல தடைகளின் மத்தியிலும் மிகவும் எழுச்சியாக மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப் படுகின்றன. இங்கு வாழும் இளையவர்கள் பல நெருக்கடியில் மத்தியில், சட்ட வல்லுனர்களின் அனுகூலத்தை பெற்று நடத்த எடுத்த கொண்ட இடத்தில் எல்லா பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்து வித்தாகி விட்ட வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த இளையோர் பாரட்டப் பட வேண்டியவர்கள்!



வருடா வருடம் கார்த்திகை 27 நிகழ்வுகள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை வியம்பி நிற்கும் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. இந்த முறை நிகழ்வும் மிகவும் எழுச்சியாகவும், அலை கடலாய் மக்கள் கூட்டம் காலை 6:00 மணியிலிருந்து கலந்து கொண்டார்கள். பல மக்கள் மண்டபம் நிரம்பி திரும்பி செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். வாகனத்தரிப்புக்கள் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கைக்குழந்தைகளுடனும், தள்ளாடும் வயதில் முதியோரும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருந்தனர்.




மறைமுக காவல் துறையினரின் நடமாட்டம் சற்று அதிக‌மாகவே இருந்தது. அவர்களும் தகவல் சேகரிக்கும் முயற்சியிலும் தம் தேவைகளுக்கு ஆவணப்படுத்துதலிலும் ஆங்காங்கே முயன்ற வண்ணம் இருந்தார்கள். இது தொடர்பாக துடுப்பான இளைஞர் ஒருவரிடம் வேற்றினத்தவரின் கலந்துரையாடிய போது ( கேட்ட சம்பவம்)

வேற்றினத்தவர்: எங்கு செல்கிறீர்கள்?

இளைஞன்: மாவீரர் நாளுக்கு

வேற்றினத்தவர் : எப்படி இது நடக்கின்றது என்று உமக்கு தெரிந்தது?, யாராவது அழைத்துச் சொன்னார்களா?

இளைஞன்: எனக்கு ஒருவரும் அழைத்து சொல்லவில்லை, கார்த்திகை 27 என்றால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். இதற்காக நான் காத்திருந்தேன்.

வேற்றினத்தவர்: இங்கு யாராவது பணம் சேகரிக்கின்றார்களா?

இளைஞன்: எனக்கு தெரியாது, நான் என் நாட்டில் கஷ்ட்ப்படும் மக்களுக்கு கொடுக்க
விரும்புகின்றேன், உங்களுக்குத் தெரியுமா?

வேற்றினத்தவர்: இந்த நிக்ழ்ச்சியை நடத்துபவர் யார்?

இளைஞன்: எனக்குத் தெரியாது, அதை அறியத்தான் நீங்கள் வந்திருந்தால்
உள்ளே சென்று அறிந்து கொள்ளுங்கள் அது எனக்கு தேவையில்லாத தகவல்.

வேற்றினத்தவர்: நீங்கள் போகலாம்.

எது எவ்வாறு இருந்தாலும் மக்களின் மன நிலை அங்கு வந்திருந்த வேற்றினத்தினருக்கும் நிச்சயமாக விளங்கியிருக்கும்.





நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தால் போல், "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா" என்ற நாட்டிய நாடக நிகழ்வு நடந்தது.



நிகழ்வின் இறுதி நிகழ்வாக மக்களின் மனதை உருக்கி ஈழத்தில் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மன நிலையயும், அவர்கள் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் தேவையை விளக்குமாக ஒரு எழுச்சி நாடகம் நடை பெற்றது.



உலகெல்லாம் நடந்த நிகழ்வுகளின் பெயர்கள் கொண்ட பதாதைகளுடன் இடம்பெயர்ந்தோருக்கு கைகொடுப்பதாக சித்தரித்திருந்தார்கள்.



போராளிகள் பூட்டை உடைக்க பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கைகொடுக்க விடுதலை என்ற கதவு திறக்க ஈழ மாதா தோன்றுகின்றாள்.



மக்கள் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றார்கள்.



எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருந்தது. நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது.



மாவீரர் நிகழ்வு நினைவுப் படங்களை பார்க்க... ( நன்றி , நினைவுகள், செய்தி இணையம்)






2 comments:

தமிழ் மதுரம் 4:19 AM  

எல்லோர் மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாடகம் அமைந்திருந்தது. நாம் எல்லோரையும் இந்த குறிக்கோள் நோக்கி அழைத்து செல்ல வேண்டிய காலம். நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி எந்த பொழுதிலும் மக்களோடு இணையாமல் இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களையும் உள் வாங்க வேண்டிய காலம் இது.

அண்ணா நன்றாக எழுதுகிறீர்கள். ம்....ஒரு நேரடி வர்ணனண கேட்பது போல் உங்கள் தகவல்கள் அமைந்துள்ளன.

காரூரன் 8:32 PM  

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. அடிக்கடி வந்து குறை நிறை சொல்லுங்கோ. ஏதோ கிடைக்கின்ற நேரத்தில் என் கிறுக்கல்..

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP