June 5, 2009

உணர்வு பூர்வமாகவா அறிவுபூர்வமாகவா சிந்திக்கும் நேரம் இது?







புலம் பெயர்ந்த மக்களிடையே ஒருமித்த கருத்தையும் செயற்பாட்டையும் ஏற்படுத்த பலரும் முயற்சிக்கின்ற இந்த வேளையில், ஒரு சிலரின் தனிப்பட்ட நோக்கங்கள் கொண்ட அல்லது தலைமைத்துவ சிந்தனைகள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றது. பல ஆண்டுகளாக பல மாவீரர்களின் அர்ப்பணிப்பில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வேட்கையை அணையாது தொடர்ந்து, எமது தமிழீழத் தாயகத்திற்கான முன்னெடுத்துச் செல்லவேண்டியது நம் எல்லோரின் கடமை.

நாம் பல்லாயிரக் கணக்கான மக்களை சிங்கள அரசின் இனச் சுத்திகரிப்பினால் இழந்தும், 300,000 மக்களை வதை முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத அனாதைகளாகவும், 13,000 மேற்பட்டோர் முகாம்களிலிருந்து கடத்தப்பட்டு அவர்களின் நிலை தெரியாத நிலையிலும் மிக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் அவசரமானது எது?, அவசியமானது எது? என்று பிரித்தறியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவசியமானவை யாவும் அவசரமானது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் எம்மக்களுக்கு ஒரு உடன் விடிவாக அவர்களுக்கு தேவையான உணவு, உடை, உறையுள், சுயாதீனமாக சொந்த இடங்களில் சென்று வாழ வழி செய்யவேண்டும்.

இந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நமக்கு வெளி நாட்டு அரசுகளினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் எமக்குச் சார்பான நிலைய ஏற்படுத்த வேண்டும். ஓர் அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையத் தவிர்த்து உலகளாவிய தமிழ் மக்களின் ஒருமித்த ஒரு நிலைப்பாடு உருவாக்கப் பட வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்து மக்களுக்கு உடனடி நிவாரணம் சேர நாம் உழைக்க வேண்டும். இந்த உடனடித் தேவைக்காக நாம் உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டும்.

முன்னுதராணாமாக பல தமிழ் தலைமைகள் செயற்பட்டாலும், பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஈடாக, கூடிய புலம் பெயர் தமிழர் வாழும் கனடாவில் முன்னெடுக்க முடியவில்லை என்ற ஒரு குறைப்பாடும் விளங்குகின்றது. நம் மக்களை தலைமைப்படுத்த முயற்சிப்பவர்கள் மக்களை பிரித்தாள முயற்சிக்கக்கூடாது.

புலம்பெயர் நாடுகளில் தலைமைப் படுத்த முயற்சிப்பவர்கள்,

1. புலம் பெயர் நாட்டின் தேசிய மொழியிலும், நாட்டு அரசியல் பின்னணிகள், அரசியல் தலைவர்கள் முன்பு கூறிய கருத்துக்கள், இன்றைய நிலைப்பாடு, ஊடகங்களை கையாளக் கூடிய தன்மை போன்றவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2. எந்த நேரத்திலும் ஊடகங்களோ, அரசியல் பிரமுகர்களோ, தொண்டு நிறுவனங்களோ தொடர்பு கொள்ளக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
3. தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு சட்ட திட்டங்களினால் பாதிக்கப் படாதவராக இருக்க வேண்டும்.
4. தனிமனித அடையாளத்தை முன்னிறுத்தாமல், எம் மக்களின் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும்.

மேற்பட்ட கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கும் போது உள்ளூர் தலைமைகளில் எந்த குழப்பமும் ஏற்படாது. எம் தமிழ் இனத்தைச் சார்ந்து அரசியல் பிரதி நிதித்துவம் செய்யும் அரசியல் வாதிகள் இலங்கை, இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இரா. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு எம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்கள். அவர்களுடைய ஆரோக்கியமான கருத்துக்களை புலம் பெயர் நாட்டிலுள்ள் அரசியல் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். புலம் பெயர் மக்களின் அழுத்தம், இலங்கையில் வாழும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதி நிதிகளை வெளி நாட்டு அதிகாரிகள் யார் சென்றாலும் சந்திக்கும் வகையில் எங்களுடைய அழுத்தங்கள் இருக்க வேண்டும்.

உலகளாவிய அளவில் ஒருமித்த போராட்டமே எம் இலக்கை இலகுவாக அடைய வழி சமைக்கும். வெறும் உணர்வு பூர்வமாக சிந்தித்து மட்டும் நாம் நம் இலக்கை அடைந்து விட முடியாது. அறிவுபூர்வமாகவும் எம் சிந்தனை அமைய வேண்டும். எந்த குறிக்கோளும் இல்லாமல் ஒரு சிலரை வால் பிடிக்கும் தன்மை தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும். தியாகி என்றோ, துரோகி என்றோ நம் தேவைகளுக்காக யாரையும் அடையாளப் படுத்த முயற்சிக்காமல், எம் மக்களின் உடனடித் தேவைகளுக்கு விடிவு தேடுவதுடன் எம் தமிழீழத் தாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

கீழே தரப்பட்டுள்ள "தமிழீழமே தாகம்" நிகழ்வு காணொளியில் இணைக்கப்பட்டுள்ள‌ பாடல் வரிகளைக் கேளுங்கள். ( நன்றி - நினைவுகள்.கொம்)
இப் பாடல் வரிகள் பல யதார்த்த நினைவுகளை அசைய வைத்து எங்களை ஒற்றுமைப் படுத்தும் என்று நம்புகின்றேன். உங்கள் கருத்தையும் பகிர்ந்து செல்லுங்கள்.



0 comments:

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP