September 16, 2007

எதை விரும்புகின்றாய் என்று அறிந்துகொள்!

நாம் பல மனிதர்களுடன் பல வேளைகளில் பல்வேறு பட்ட கருத்துப் பரிமாற்றங்களை, எண்ணங்களையும் பரிமாறியிருக்கலாம். வாழ்க்கை எனபதிற்கு ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதை அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரே தமது பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். என்னை மிகவும் கவர்ந்த ஒரு வெற்றி பெற்ற மனிதரின் உரையிலிருந்து சில கருத்துக்களை நம் வாழ்வியலுடன் அசை போட்டு பார்க்க முயல்கின்றேன்.


இந்த பெரும் புள்ளியின் தாயார் ( biological mother) தன் மகன் ஒரு கல்லூரி பட்டதாரியாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் தன் வருமான‌த்தின் இயலாமையால் தன் பிள்ளையை ஒரு பட்டதாரி குடும்பத்திற்கு தத்து கொடுக்க முயன்று கடைசியில் பாடசாலையே முடிக்காத தந்தையும் கல்லூரி முடிக்காத தாயும் தத்தெடுக்க விட்டார்.

தனது 17 வயதில் கல்லூரி படிப்புக்காக நுழைந்தும், சராசரி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெற்றோரால் தாம் வாழ் நாளில் சேகரித்த முழுப்பணத்தை செலவிட்டும் கல்லூரி படிப்புக்கு மாத்திரமே செலிவிட முடிந்தது. தங்குவதற்காக நண்பர்களின் அறையில் தரையில் படுத்து காலத்தை ஓட்டினார். கைச்செலவிற்காக கோக் (coke bottles) போத்தல்களை சேர்த்து கொடுத்து ஒரு போத்தலுக்கு 5 சதம் வீதம் பெற்றுக் கொண்டார். வாரத்தில் ஒரு முறை 7 மைல்கள் நடந்து சென்று "கரே கிருஷ்ணா" ஆலயத்தில் வயிறார சாப்பிட்டாராம். இதே வேளை தான் படித்து கொண்டிருந்த பட்ட படிப்பில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். 6 மாத்தில் தான் படித்த பட்ட படிப்பை விட்டுவிட்டு தனது பகுதி நேர படிப்பாக calligraph பாடத்தை கற்று கொண்டார். இந்த படிப்பு எழுத்து உருவம் சம்பந்தமானது. இந்த படிப்பு இல்லாவிட்டால் பல எழுத்துருக்கள் ( type faces) கொண்ட கணணியை உருவாக்கியிருக்க முடியாது என்கிறார்.

தனது 20 வயதில் பெற்றோரின் கராஜ்ஜில் ( garage) இருவர் மட்டுமே கொண்ட கணணி நிறுவனத்தை ஆரம்பித்து 10 வருடங்களில் உலகு போற்றும் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றினார். வாழ்க்கையில் நாம் கடந்து வந்த வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்தால் மாத்திரமே அவற்றில் உள்ள முக்கிய புள்ளிகளை இணைத்து பார்க்கலாமாம் (connect your dots). ஆனால் எதிர் காலத்தை அல்ல. நாம் நம்புவது தைரியம், எதிர்காலம், வாழ்க்கை, கர்மா போன்றவை என்று சொல்லிக் கொண்டாலும் தனது அணுகுமுறையை எதுவுமே தடை செய்யவில்லையாம். தனது வாழ்க்கையில் இந்த நிலைக்கு வருவதற்கு தனது அணுகுமுறையே காரணமாம்.

நாம் நேசிப்பது எதுவாக இருந்தாலும் அது மறுக்கப்படும் போது அதன் வலி தாங்கமுடியாததாக இருக்கும். இந்த வெற்றி பெற்ற மனிதருக்கும் வாழ்க்கையில் சவால் காத்திருந்தது. தான் தன் உதவிக்காக ஒருவரை‌ ( chief Operating Officer) முதன்மை நடத்து இயக்குனராக தெரிவு செய்து, இயக்குனர் சபை அவருக்கு சார்பாகி தான் ஆரம்பித்த‌ நிறுவனத்திலிருந்து 30 வயதிலே வெளியேற்றப்பட்டார் ( Fired from his company). உலகுக்கே தெரிந்த ஒரு தலைவர் தனது வேலையில் இருந்து அகற்றப்பட்டது பத்திரிகை தலைப்புக்களாகின. செய்வதறியாது வெட்கி தலை குனிந்தார். த‌னது வாழ்க்கையின் முழு மூச்சு நின்று விட்டதாக ஒரு உணர்வு. தோல்வியின் வலி அவரை சிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடலாம் என்று எண்ண வைத்ததாம்.

சில மாதங்களின் பின் தான் மறுக்கப்பட்டது சில மனிதர்களாலேயே தவிர தான் நேசித்த துறையை அல்ல என்று உணர்ந்து கொண்டார். அடுத்து வந்த 5 வருடங்களில் NeXt என்ற கணணி நிறுவனத்தையும், PIXAR என்ற‌ Animation நிறுவனத்தையும் ஆரம்பித்தார். உலகத்திலேயே முத‌ல் கணனி மயப்படுத்தப்பட்ட Animation Movie - TOY STORY தயாரிக்கப்பட்டது PIXAR இல் தான்.

சில வருடங்களின் பின் எந்த நிறுவனத்திலிருந்து இவர் நீக்கப்பட்டாரோ அதே அப்பிள் ( Apple) நிறுவனம் இவருடைய புதிய நிறுவனமான NEXT ஐ கொள்வனவு செய்து மீண்டும் அப்பிள் நிறுவனத்தின் சிம்மாசனத்தில் இருத்தியது. இவர் வேறு யாரும் இல்லை ஷ்ரீவ் ஜொப் ( Steve Jobs) தான். கசப்பான மருந்தும் உடல் நலத்தை திருத்த உதவுவது போல், Apple இல் தன் கசப்பான அனுபவங்களும் அதன் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது என்கிறார் Steve.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் காரணி, தான் விரும்பியதை எப்போதும் செய்யக்கூடியதாக இருந்தது தானாம்.

Steve இன் பார்வையில் ‍‍‍
"
இவை எல்லாம் நடந்திருக்காது நான் அப்பிள் இருந்து அகற்றப்படாமல் விட்டால். எதற்கும் பொறுமை அவசியம் என்று நம்புகின்றேன். சில சமயங்களில் வாழ்க்கையில் நமக்கு யாரோ கல்லால் தலையில் அடித்தது போன்ற கடினமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கையை இழக்க கூடாது. நீ எதை விரும்புகின்றாய் என்று முதல் அறிந்து கொள். அது உனது காதலாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி பொருந்தும். உனது வேலை தான் உன் வாழ்க்கையின் பெரிய பாகமாக இருக்கப் போகின்றது. நீ
எது உன்னை திருப்திபடுத்தும் என்று நம்புகிறாயோ அது வரை முயற்சி செய். எந்த ஒரு நல்ல உறவாக இருந்தாலும், காலம் போக போக தான் அது மிகவும் நல்லதாக அமைகிறது. இல்லாவிடில் நல்ல ஒரு உறவுக்காக காத்திரு. அவசரப்பட்டு முடிவெடுக்காதே.

எனது 17 வயதில் நான் வாசித்த வரிகள்‍ _ நீ வாழுகின்ற ஒவ்வொரு நாளும் உனது கடைசி நாள் என்று வாழ்ந்தால் ஒரு நாள் நீ வாழ வேண்டியதை வாழ்ந்துவிடுவாய்_ .
நாம் எல்லோரும் ஒரு நாள் இறந்து விடுவோம். நம் வாழ்க்கையில் மற்றவர்களின் எதிபார்ப்புகள், புகழ், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை போன்றவை நம்மை ஆட்டி படைக்கின்றன. மரணத்தின் வாசலில் இவை எல்லாம் அடையாளமற்றவையாகிவிடுகின்றன. எந்த மனிதனும் மரணத்தை விரும்புவன் அல்ல. சொர்க்கத்திற்கு போக விரும்புவர்களும் மரணத்தை விரும்ப மட்டார்கள். ஆனால் இந்த மரணத்திற்கு யாரும் விதி வில்க்கல்ல. வாழ்வியலில் ஒரு பெரிய கண்டு பிடிப்பு மரணம். இது வாழ்வியலை மாற்றும் காரணி. இது பழையவற்றை அகற்றி புதுமைக்கு வழிவிடும் முறை. இன்று நீ புதுமை இன்னும் சில காலத்தில் நீயும் பழமையாகி அகற்றப்படுவாய். இது வாழ்க்கையின் யதார்த்தம்.

உனது நேரம் வரையறுக்கப்பட்டது. உன் நேரத்தை மற்றவரின் வாழ்க்கையை வாழ்வதில் வீணடிக்காதே. மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக வாழுகின்ற வாழ்க்கையில் சிக்கிவிடாதே. மற்ற‌வர்களின் புகைச்சல்கள் உன் உள் மனதின் குரலை நசுக்காமல் பார்த்து கொள்ளு. நீ ஏற்கனவே நிர்மாணமானவன், எனவே தயங்குவதற்கு என்ன இருக்கிறது உன் உள்ளத்தின் உணர்வுகளை பின் தொடர.

தாகமாய் இரு, முட்டாளாய் இரு. "


இந்த உரையை Steve Jobs, Stanford University பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தின‌ராக வந்த போது த‌ந்திருந்தார். நான் எனக்கு பிடித்த பகுதியை எனது தமிழாக்கத்தில் தந்திருக்கின்றேன்.

8 comments:

Chandravathanaa 1:51 AM  

நல்ல பதிவு.
சுவாரஸ்யமான தகவல் மட்டுமல்ல, படிப்பினையையும் நம்பிக்கையையும் தரக்கூடிய பதிவு

காரூரன் 8:36 PM  

சந்திரவதனா,
பல மனவோசைகளை தந்த உங்களின் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் ஊட்டுகின்றது. கீறல்கள் விழுந்துவிடாமல் தொடர்ந்து கிறுக்கிறேன்
நன்றிகள்.

மாசிலா 10:22 AM  

அருமையான கருத்துக்கள் காரூரன். மனம் தளந்தவார்கள் கட்டாயாம் படிக்க வேண்டிய பதிவு.

இருந்தாலும், வாழ்க்கை என்பது ஒரு புதிர்தான். சந்தர்ப்பங்களின் பிம்பமே வாழ்க்கை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

காரூரன் 5:45 PM  

மாசிலா,
*//இருந்தாலும், வாழ்க்கை என்பது ஒரு புதிர்தான். சந்தர்ப்பங்களின் பிம்பமே வாழ்க்கை//*
உண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க‌ நன்றிகள்.

செல்லி 12:12 AM  

காரூரன்
//மற்றவர்களின் எதிபார்ப்புகள், புகழ், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை போன்றவை நம்மை ஆட்டி படைக்கின்றன.//
இது இடியப்ப சிக்கல். சாதாரண சிக்கலா இருந்தா விடுவித்துக் கொள்ளலாம். முடியலையே?:-(
நல்ல பதிவு , பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறீங்க, நன்றி

காரூரன் 9:49 PM  

செல்லி,
உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள். அடிக்கடி வந்து குறை நிறை சொல்லுங்கோ.

தமிழன்-கறுப்பி... 3:19 PM  

நல்ல பதிவு நம்பிக்கை தருகின்ற விசயம்.

நான் எனக்கென்று ஒரு வலைப்பதிவு இல்லாத பொழுதே இந்த பதிவை வாசித்து விட்டேன், அதற்கு முன்பும் எங்கோ படித்த ஞாபகம் அதுவும் உங்கள் பதிவிலாகவும் இருக்கலாம்…
எனக்கும் அப்படித்தான் சில விசயங்கள் இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கிறது ஆனால் எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது இருந்தும் அவற்றின் பாதிப்புகள் இன்னும் மறையவில்லை ஆனால் காலம் அவற்றிலிருந்து கொஞ்சம் வெளியேற்றியிருக்கிறது எனவே நம் காலத்துக்குள் நாம் வாழ்ந்துவிடவேண்டும்தானே…

நானும் வாழ்கையை சொட்டுச்சொட்டாக
அனுபவித்து வாழவேண்டும் என்று விரும்புபவன். (ஆனால் சில விசயங்களை அனுபவிக்க முடிவதில்லை என்பது வேறுவிடயம்) அதுவும் நாம் இந்த உலகத்தை விட்டு போகும்போது எதை விட்டுப்போகிறோம் அல்லது இந்த பூமிக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதைவிட என் கடைசித்தருணத்தில் நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி இருக்கவேண்டும் என்கிற கருத்துடையவன்.அது இருந்தாலே நாம் இந்த உலகுக்கு ஏதாவது செய்திருக்கிறோம் என்று அர்த்தம்.

நாளைக்கே சாவதற்கு மனது தயாராக இருக்கவேண்டும்
நூறு வருசம் வாழ்வதற்கு உடம்பு தயாராக இருக்கவேண்டும்

எங்கள் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாலே நாம் நம் இலட்சியங்களில் வென்றுவிடலாம் என்பது உண்மைதான்…

காரூரன் 9:43 PM  

Thamilan,

*//நானும் வாழ்கையை சொட்டுச்சொட்டாக
அனுபவித்து வாழவேண்டும் என்று விரும்புபவன். (ஆனால் சில விசயங்களை அனுபவிக்க முடிவதில்லை என்பது வேறுவிடயம்)//*

முதல் வரியில் ஆதங்கத்தையும், அடுத்தவரியில் அங்கலாய்ப்பையும் தெரிவித்திருக்கிறீர்கள்.அடி மனதில் உள்ள காயத்தை நீக்க யாரும் நம்பிக்கையான உறவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*//நாளைக்கே சாவதற்கு மனது தயாராக இருக்கவேண்டும்
நூறு வருசம் வாழ்வதற்கு உடம்பு தயாராக இருக்கவேண்டும்//*

உனக்காக மட்டும் வாழும் போது சாவதற்கு எப்போதும் தயாராக இருக்கலாம். உன்னை நம்பி சில ஜீவன்கள் இருக்கும் போது அந்த நினைப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP