September 29, 2008

கனடிய தமிழ் வானலைகள் ஒரு குடையில் ஒன்றாகின....


கனடிய தமிழ் வானலை நிலையங்கள் ஒன்று சேர்ந்து வன்னியில் வாடி நிற்கும் உடன் பிறப்புக்களுக்காக CARE என்ற சுய லாபமற்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட துயர் துடைக்கும் நிதி சேகரிக்கும் வைபவம் ஆவணி 27 & 28 திகதிகளில் நடை பெற்றது.


கனடிய தமிழ் மக்களுக்கு இது ஒரு முக்கிய நிகழ்வாகவே இருந்தது. தேசியத்தை நேசிக்கும் எல்லோரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். எது எவ்வாறு இருப்பினும் வானொலிகள் சேவை செய்யும் நிறுவனங்கள் என்று சொன்னாலும் இதுவும் ஒரு வியாபார முயற்சி என்பதிற்கு மறுப்பதற்கு இல்லை. கலந்து கொண்ட நேயர்கள் பலர் ஆரோக்கியமான கருத்துக்களை பகிந்திருந்தனர்.

கனடிய தமிழ் பொது நிறுவனங்கள் அனைத்தும் தமிழ் வானொலிகள் எல்லாவற்றிற்கும் தமது தகவல்களை தர வேண்டும். எந்த ஒரு வானொலியும் தாம் தான் தேசியத்தின் வானொலி என்று மக்களை குழப்புவதை விட்டு, வானொலிகள் அனைத்தும் தேசியத்திற்கான வானொலிகள் என்ற எண்ணப்பாடுகள் இருக்க வேண்டும். தேசியத்திற்கான நிகழ்வுகள் அனைத்து வானொலிகளிலும் எடுத்து வரப் படவேண்டும். இது போன்ற பல கருத்துக்கள் மக்களால் முன் வைக்கப்பட்டிருந்தன.



CTR,GTR,MTR,ITR,TTR,CTBC, Tamilstar ஆகிய 7 வானொலி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் வன்னியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க ஒலித்து கொண்டிருந்தனர். இது போல் ஒற்றுமை தொடர வேண்டும்.

தமிழ்ச்சோலை வானொலி அறிவிப்பாளர் நிகழ்வுகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். பல தமிழக உணர்வாளர்கள் வானலைகளில் கலந்து கொண்டு தம் உணர்வுகளை பகிர்ந்திருந்தார்கள். தேசியம் தம் தேவைகளுக்காக யாரையும் அணுகலாம், ஆனால் மாறாக, தேசியத்தை பாவித்து யாரும் தம் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்க கூடாது. மக்கள் தற்பொழுது விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

எம்மக்களின் அவலக்குரல் தமிழகத்திலும் கேட்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. இன்று எல்லோரும் மொழியினால் இணைய வேண்டிய காலம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நன்மையாக நடக்க நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும். பிரிவுகளை உருவாக்கி சுயலாபம் தேடுபவர்களை மக்கள் இனம் காண வேண்டிய காலம் இது.





எமது வரலாற்று கடமையை தொடர்ந்து செய்ய நாம் மறந்து விடக்கூடாது. கையேந்தி நிற்கும் நம் உறவுகளுக்கு உரிமையுடன் கை கொடுத்து காப்பாற்ற வேண்டியது எம் கடமை.ஐப்பசி மாதம் 5ம் திகதி (2008) வரை CARE நிறுவனம் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மேலேயுள்ள "சுமை தாங்கி" பிரசுரப் படத்திலுள்ள முகவரியுடன், உலகத்தின் எம் மூலையிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

2 comments:

இறக்குவானை நிர்ஷன் 11:37 PM  

நல்லதொரு பணி.
நமக்காக நாமே முன்வரவேண்டிய சூழலில் இவ்வாறான ஏற்பாடுகள் காலத்தின் கட்டாயமாகும்.

காரூரன் 9:48 AM  

நன்றி இறக்குவானை நிர்ஷன்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP