February 19, 2009

U.N. உள்ளே என்ன நடக்கின்றது?



இது ஒரு பேட்டி, ஈழப் பிரச்சனையை முன்வைத்து U.N இன் நடவடிக்கையை மேற்கத்தைய நிருபர் விமர்சிக்கிறார். நிச்சயம் கேட்க வேண்டிய பேட்டி.





Read more...

February 15, 2009

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!


ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையை இலங்கை மனித அவலம் தொடர்பாக‌ உடனடியாக எம்மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான‌ மனு இங்கே கீழே தரப்பட்டுள்ளது.

மனுவை அனுப்புவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தயவு செய்து உங்கள் நட்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி http://www.petitiononline.com/sgsl159/petition.html
என்ற இணைய முகவரி மூலம் மனுவை நிரப்பிக் கொள்ளலாம்.

முடிந்தால் உங்கள் தளங்களிலும் இந்த மனுவிற்கான இணைப்பை போடவும். காலத்தின் கட்டாயத்திற்கான தேவை. குறிப்பாக தமிழ் நாட்டு சகோதரர்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு ஊட்டும்

Read more...

February 8, 2009

நீங்களும் மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ளலாமா?


மேற்குலகில் மருத்துவம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு பல சிரமங்கள் உண்டு. கீழைத் தேசங்களில் 12ம் வகுப்பு முடிந்த பின் ஒரு தேர்வுப் பரீட்சை எடுத்த பின்பு M.B.B.S படிக்க தகுதி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்குலகில் குறைந்தது 2 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து, MCAT தேர்வில் சிறப்பாகச் செய்து, நேர்முகத் தேர்வு ஒன்றிற்கு அமர்ந்து அதில் தெரிவுக் குழுவை திருப்திப் படும் பட்சத்தில் தான் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு உண்டு.

நீங்கள் எந்த வயதிலும் மருத்துவத்துறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. தென் ஆபிரிக்காவிலிருந்து உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் வந்து கனடாவில் Doctor of Medicine ( M.D) பட்டம் பெற்று மருத்துவராக கடமையாற்றுகின்றார்.

பொறியியலாளரும், வழக்கறிஞரும் மருத்துவம் கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. இங்கு மருத்துவ பீடம் கிடைக்காதவர்கள் கனடாவில் இருந்து இந்தியா சென்று படித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் பின்பு கனடாவில் சில பரீட்சைகள் எடுத்து தான் வேலை செய்ய வேண்டும்.

IMHO ( International Medical Health Organization) என்ற தன்னலமற்ற சேவை நிறுவனம், மருத்துவர்களை ஒன்றிணைத்து ஈழத்தில் அன்னலுறும் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். இந்த கனடாக் கிளையின் இளைஞர்களை இணைக்கும் டாக்டர் கண்ணா வேலா கொடுத்துள்ள பேட்டியில் மருத்துவம் படிக்க இளையவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருத்துப் பகிர்வு செய்திருக்கின்றார். கேட்டுச் சொல்லுங்கள்.


Dr. Kanna Vela Interview - GTR

Read more...

February 7, 2009

உதவி செய்தலும் உதவி பெறுதலும்


உதவி பெறாமல் வாழ்ந்தவர்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது. ஆயினும் உதவி செய்கின்ற மனப்பாங்கு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது ஏன் என்று ஒரு சின்னக் கேள்வியை எனக்குள்ளே எப்போதும் அசை போட்டுக் கொள்வதுண்டு. நான் யாரிடமாவது உதவி கேட்பதாயின் பல தடவைகள் சிந்தித்துத்தான் அணுகியதுண்டு அப்போதும் மூக்குடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு.

சுனாமிக் காலத்தில் அனேகமானோர் தாங்களாக முன் வந்து உதவிய போது, காலத்தின் தேவை கருதி உதவுபவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று திருப்திப் பட்டதுண்டு. இந்தக் காலத்தில், எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் இதற்கு பங்களிப்பு செய்யக் கேட்ட போது அதில் ஒருவர் " அவை அவை தாங்கள் விலாசம் எழுப்புகின்றதுக்கு காசு கேட்கினம்" என்று விமர்சித்தார். அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இவர் ஒரு சிலருக்கு தண்ணி வேண்டிக் கொடுத்து விட்டு தன்னை பெரியவராக உருவகப் படுத்தி எம் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதே தொழிலாகச் செய்வார். இவருடன் போராட்டத்தை நேசிப்பவர்கள் இருந்தாலும் " நக்கினார் நா இழந்தார்" என்பது போல் அவருக்கு வால் பிடித்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன்.

உதவி செய்யாமல் தவிர்த்து கொள்பவர்களில் அனேகமானோர் மற்றவர்களின் உதவியை அதிகம் வேண்டி நிற்பவர்களாயும், தாங்கள் புத்திசாலிகள் என்ற எண்ணக் கருவை கொண்ட சுய நலவாதிகளாய் இருப்பதையும் பார்த்திருக்கின்றேன். பழகிய 10 நிமிடத்திலேயே தாங்கள் வல்லவர்கள், படித்தவர் அல்லது பணக்காரர் என்ற தோறணையை வெளிப்படுத்துபவர்களாகவோ அல்லது உலகத்தில் எல்லாவற்றையும் இழந்து வாழ்பவர்கள் என்ற அனுதாபத்தை மற்றவர்களிடம் வேண்டி நிற்கும் அணுகுமுறையைப் பார்த்திருக்கின்றேன். சூடு சுரணை என்பது இவர்களிடம் மிகக் குறைவு, தங்கள் காரியம் ஆக வேண்டுமானால் என்ன பல்டியும் அடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் சொன்ன பொய்யிற்கும் இன்று சொல்லும் பொய்யும் முரண்படுவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

சிக்கனமாய் வாழ்வதற்கும் கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இவர்கள் உதவி செய்யாமல் தொடர்ந்தும் இவர்களுக்கு உதவி கிடைப்பது தாம் புத்திசாலித்தனமாய் சமுதாயத்தை உபயோகிக்கின்றோம் என்ற எண்ணம் தான்

எல்லோராலும் உதவ முடியும். பண உதவி மாத்திரம் உதவியாக அமைந்து விடாது. சரீர உதவி, சில வேளைகளில் ஆறுதல் வார்த்தைகளும் உதவியே.

நாம் இன்று உலகத்தின் உதவியை வேண்டி நிற்கின்றோம், அண்மையில் தென் ஒன்ராரியோவிலை அதிகளவு இரத்த தானம் கொடுத்த இனம் தமிழ் இனம் என்று கனடிய இரத்த தான அமைப்பினர் வாழ்த்தினார்கள். இந்த நாட்டிற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த தான் இத்த இரத்த தானம் நிகழ்ந்தது.

உதவி செய்தவர்களுக்குத் தான் திருப்பி உதவி செய்ய வேண்டும் என்றோ அல்லது தெரிந்தவர்களிக்கு மட்டும் உதவ வேண்டும் என்ற‌ அவசியம் இல்லை. யாரும் யாருக்கும் உதவலாம். ஒரு சிலர் மற்றவர்களை காயப் படுத்துவதே தொழிலாக செய்வார்கள். இப்படியானவர்கள் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே பெரிய உதவி. ஒரு சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வலியப் போய் உதவுவார்கள் ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சின்ன உதவியும் செய்ய மாட்டார்கள்.

உதவி என்பது பொருள், காலம் அறிந்து கேட்காமலே செய்ய வேண்டியது, உதவி செய்தது அவர்களை திருப்தியடையச் செய்ததா என்பதை அறிய முயல வேண்டும். வெறுமனே கடமைக்காக செய்த உதவியாக அமைந்து விடக் கூடாது. மற்றவர்கள் துணிந்து உங்களிடம் உதவி கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால் அது பெருமைப் பட வேண்டிய விடயம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் பகுதி நேர ஆசிரியனாக கடமையாற்றிய அனுபவம் உண்டு. பல தரப்பட்ட மாணவர்களை சந்திக்கும் வய்ப்பை பெற்றவன். ஆசிரியத் தொழிலை ஏணிக்கு ஒப்பிடுவார்கள், படித்து முடித்த பின் ஏறி மிதிப்பார்கள் என்ற யதார்த்தமும் அடங்கியுள்ளதை அறிந்துள்ளேன்.

நீங்கள் பல பட்டங்களை எடுத்தவராகவோ அல்லது பல மேடைகளில் தொண்டை கிழிய உங்கள் கருத்துக்களை சொல்லுபவராகவோ இருந்தால் போதாது, உங்களை ஒரு சாதரணனும் அணுகக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அணுக முடியாதவர்களாக வாழும் வாழ்க்கை முழுமை அடைந்து விடாது. உதவி செய்பவர்கள் இழிச்ச வாயர் என்ற எண்ணப் பாடுகள் சிலருக்குண்டு. இந்த எண்ணம் உள்ளவர்களும் காலப் போக்கில் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் அவர்கள் தேவைகள் பூர்த்தியாகும் போது மாறிவிடும்.

கனடிய சமூகம் மிகவும் உதவும் எண்ணம் கொண்ட சமூகம். இந்த நீரோட்டத்தில் கலந்து விட்டும் மற்றவர்களுக்கும் உதவும் மன நிலையை நாம் வளர்க்காவிட்டால் நாம் மனிதத்திலிருந்து விலகியவர்கள் ஆகி விடுவோம். ஒரு கை உதவினால் மற்ற கைக்கு தெரியக் கூடாது என்பார்கள், ஆயினும் எங்களுக்கு உதவியவர்களை மறக்காமல் நினைவு கோர வேண்டியது எம் கடமை.

உங்களுக்கும் உதவி மறுக்கப்பட்ட அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ!



Read more...

February 5, 2009

கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.


கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.


மதிப்புக்குரிய Jim Karygiannis M.P , Scarborough- Agincourt என்றவரின் முயற்சியிலை கனடாவில் தமிழருக்கான அவசர விவாதம் இன்று தான் நடை பெற்றது. கனடா இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் எம் மக்கள் அன்றாடம் படும் கஸ்டத்தையும் விளக்கியிருந்தார்.


3 மில்லியன் பணத்தை கொடுப்பதுடன் நின்று விடாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அது சென்றடைய வேண்டும். போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை உடனடியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும். சமாதானத்திற்கான தீர்வை எட்டுவதற்கு கனடா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கனடாவிலுள்ள குடும்பங்களுடன் அவர்களுடைய உறவுகள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இழுத்தடிக்கப் படாமல் அதிகாரிகளை அதிகரித்து உடனடியாகச் செய்யப் படவேண்டும். வெறும் வார்த்தை அளவில் இல்லாமல் செயல் அளவிலும் நாம் இருக்க வேண்டும் என்றார்.

பல M.P. க்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பல தரப்பட்ட விவாதங்கள் முன் வைக்கப்பட்டது. U.N போன்றவை பெரிய அமைப்புக்களாய் இருந்தும் இலங்கை விடயத்தில் எதுவும் செய்து விடவில்லை. கனடா போன்ற நாடுகள் U.N இனூடாக ஒரு தீர்மானத்தை எடுத்து இலங்கை விடயத்தில் தலையிட வேண்டும். ஒரு உறுப்பினர் தன் உரையில் தமிழர்கள் கனடிய நீரோட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறியிருக்கின்றார்கள், எனக்கு தெரிந்த நண்பர் லோகன் கணபதி ( மார்க்கம் மா நகராட்சி உறுப்பினர்) அவர் மனைவி மருத்துவராக இருக்கின்றார் என்று உதாரணமிட்டு பேசினார்.

ஒரு உறுப்பினர் தன் உரையில், இது அறிவுசால் ஆய்வு விவாதம் அல்ல, மனித அவலம் சம்பந்தமானது எனவே அந்த கோணத்துடன் பார்க்கப் படவேண்டும் என்றார். அவர் நியுயோர்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளை மேற்கோள்காட்டி, அரசு கிழக்கில் விடிவை எற்படுத்தியதாக சொல்லி அங்கும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகச் சொன்னார். அம்னெஷ்டி, Human Right Watch, பல நிறுவனங்கள் இதைப் பற்றி மறுக்கமுடியாத பல அறிக்கையை சொல்லியிருக்கின்றன.

இடம்பெயர்ந்துள்ள 300,000 மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்றார், சிறுபான்மையினம் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப் படவேண்டும். புலிகளை அழித்து விட்டால் தீர்வு வந்து விடாது, அது இன்னும் 30 வருடங்களுக்கு பிரச்சனையை கொண்டு செல்லும்.

அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொன்று சமாதனத்திற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அர்சு அழித்துவிட்டது. பல பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். கனடிய தூதரகம் வெறும் அறிக்கையுடன் நின்றுவிடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கனடியத் தமிழர்கள் தொடர்ந்து அவர்கள் M.P க்களை தொடர்பு கொண்டு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனது M.P யார்? அவரை எப்படி தொடர்பு கொள்வது?
அ) Call this toll free 1-800-622-6232 ( 8 AM - 8 PM)
ஆ) Use this Web address and key in your postal code. Get the contact info.
http://www2.parl.gc.ca/Parlinfo/Compilations/HouseOfCommons/MemberByPostalCode.aspx?Menu=HOC

இது போல் எல்லா நாட்டிலும் உள்ள தமிழர்கள் அவர்கள் அரசுகளை வற்புறுத்த வேண்டும். தொடர்ந்து அயராது உழைப்போம்!

கனடிய பாராளுமன்ற ஈழப்பிரச்சனை 4:30 மணி நேர‌ விவாதத்தை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே அழுத்தவும்.

Read more...

February 1, 2009

மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A) வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்!


உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள்.




தந்தையின் பேரில் "அருளர்" என்றும், தாயின் பேரில் "கலா" என்ற இசைத் தொகுப்புக்களை தந்து தனக்கென்று இசைத்துறையில் அடையாளம் பெற்றுவிட்டவள், பிரித்தானிய குடியுரிமையுள்ளவள், தமிழ் தன் அடையாளம் என்று வியம்பி நின்றதால் அமெரிக்கா ஒரு இசை நிகழ்வுக்கு செல்ல இருந்த போது அனுமதி மறுக்கப் பட்டாள். அப்போது கனடிய மண்ணிற்கு வந்த பொழுது கனடிய பிரதான ஊடகமான CBC இன் THE HOUR என்ற பிரபல்யமான நிகழ்வில் மனம் விட்டு தான் தமிழ் என்ற அடையாளத்தை அடித்துக் கூறுகின்றாள்.

அமெரிக்கரின் "watch list" இலிருந்ததால் தான் அனுமதி மறுக்கப் பட்டது என்று பேட்டியாளருக்கு சொல்கின்றார்கள்.
கீழே உள்ள பேட்டியை பாருங்கள்.




இந்த மாயா முதல் 10 வருடங்களை பல இன்னல்களின் மத்தியில் ஈழத்திலும், இந்தியாவிலும் வாழந்தவள். தந்தை நம் ஈழப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவர். இவர் தாயார் அவள் குழந்தையாக இருக்கும் போதே எம் பிரச்சனையை சொல்லி வளர்த்திருக்கின்றாள். தாய் துணி தைத்து கொடுத்து வருமானம் தேடி வளர்த்திட, வெட்டிய மிஞ்சிய துணிகளில் விளையாடி மகிழ்ந்தவள். இலண்டனிற்கு புலம் பெயர்ந்து இசைத்துறையில் படித்து படிப்படியாக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளாள்.

Vakthaa.tv வீடியோவை பார்க்க‌ இங்கே அழுத்தவும்..



இசைத்துறையில் நாட்டம் கொண்ட பாடகர், கிற்றார் இசை விற்பன்னர் Ben Brewer என்பவரை தன் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து தாய்மை அடைந்து கிறாமி விருது நாளில் குழந்தை பெறத் தயாராகிக் கொண்டிருக்கின்றாள். மற்றவர்கள் ஆசுபத்திரி சென்று குழந்தை பெறுவதை தவிர்த்து, வீட்டில் நீச்சல் குழத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புவதாக கூறுகின்றாள். ஈழத்தில் எந்த வசதியுமில்லாமல் முகாம்களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது இது எல்லாம் ஒரு வலியாகத் தெரியாது என்கின்றாள்.

நம்மினம் மிருகங்களை விட கேவலாமான முறையில் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட காலத்திலும் இலங்கை அரசு எந்த உதவியும் செய்யாமல் ஜேர்மனிய நாசிச காலங்களை விட மோசமானது என்று மேற்குலகிற்கு அடித்துச் சொல்கின்றாள்.

"PAPER PLANES" என்ற பாட்டிற்கு "Slumdog Millionaire" என்ற படத்தில் வந்ததிற்காகத்தான் விருது பெற தெரிவுக்குழுவின் குறுகிய தெரிவுக்குள் தெரிவாகியுள்ளாள். அவள் பாடல்களில் துவக்கு சுடும் சத்தம் எழுப்பப்படுவதைப் பற்றி கேட்கப் பட்டபோது, துவக்குச் சத்தம் என் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்று, புலம் பெயர்ந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டோர் எல்லோர் காதிலும் ஒலிப்பது இது. எங்களை நோக்கிச் சுடுவதை பார்த்தும் கேட்டும் பழகிவிட்டோம், பிடிக்காவிட்டால் சுடுபவர்களிடம் போய் சொல்லுங்கள் நிறுத்தச் சொல்லி!.

I fly like paper, get high like planes
if you catch me at the border i got visas in my name
If you come around here i make em all day
i get one down in a second if you wait

புலம் பெயர்ந்து வந்தவர்களின் கதையை நாசூக்காக சொன்ன பாடல் இது.



அமெரிக்க அரசின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று அல்கேடாவை அழிப்பதாக ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களை அழிப்பது , மற்ற அரசுகளுக்கு குறிப்பாக இலங்கை அரசு கண்மூடித்தனமாக தமிழர்களை அழிக்க வழிவகுத்தது. அமெரிக்க அரசு பொறுப்புடன் நடக்க வேண்டும் ஒபாமாவின் அரசு அதற்கான முனைப்புகளை செய்யும் என நினைக்கின்றேன், என்கின்றாள்.

காலத்தின் கட்டாயம் கருதி நமக்காக குரல் கொடுக்கும் ஒரு உறவுக்கு விருதுகள் கிடைப்பதையிட்டு நாமும் பாராட்டி, மேலும் சிறக்க வேண்டி நிற்போம்.



Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP