October 11, 2008

பழக்கமும் வழக்கமும்..


"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்று ஒரு பழமொழியில் சொல்லி இருந்தாலும் பழக்கம் என்பது நாம் வாழும் சூழல், பழகிய மனிதர்கள், கல்வி வாய்ப்புகள் போன்ற பல காரணிகளை கொண்டுள்ளது.

"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது " என்பர் சான்றோர். இங்கு ஒரு விலங்கினுடைய பழக்கம் கூட மாற்றப்படும் தனக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால். மனித பழக்க வழக்கங்கள் மாற்றப் பட வேண்டுமாயின், அவனுடைய செய்கையால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

நம்மூரில் வாழும் காலங்களில், நாம் மறைவாக ஒரு காரியம் செய்து விட்டு தப்பி விட முடியாது. நமது சுற்றத்தாரும் உறவுகளும் அறிந்து வீட்டுக்கு விடயம் வந்து விடும். மேல் நாடுகளில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. அதனால் தான் என்னவோ சில இளையவர்கள் தங்களுக்கு நிறைய சுதந்திரம் இருப்பதாக எண்ணி தங்கள் அடையாளங்களை தொலைத்து விடுவார்கள்.

ஒளவை கூட

" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்
தினமும் நடை நடைப் பழக்கம்
நட்பும் தயை கொடையும் பிறவிக்குணம்."


என்கின்றாள். ( கேள்வி ஞானத்தில் எழுதியது, வார்த்தை தவறுகள் இருக்கலாம்.)

என்னதான் பழக்கம் பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், சில பிறவிக்குணங்களும் மனித இயல்பை ஆட்டி படைக்கின்றன.

வழக்கம் என்பது எதையும் ஆராயாமல் மற்றவர்கள் செய்வதைப் போல் செய்யும் முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல பழமை வாதங்கள் கலந்திருக்கின்றன. அதற்காக பழமை வாதங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் புதுமை வாதிகளாகி விட முடியாது.

நாம் நல்ல பழக்க வழக்கமாக வாழ விரும்பினால் " சகிப்புத்தன்மை, புரிந்துணர்தல், விட்டு கொடுத்தல் " போன்ற பண்புகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். நான் தமிழ் நாட்டுக் கிராமங்களிற்கு சென்ற போது சில பழக்க வழக்கங்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. முகவரி தேடி குக்கிராமத்திலுள்ள ஓர் கொட்டிலில் இருந்த தேனீர்க் கடை சென்று வினவிய போது, தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்து முகவரியை கூறிவிட்டு " சார் ரீ சாப்பிறீங்களா!" என்று வினவினார். ஓரிரு நிமிட சம்பாசனையின் பின் என்னை ஒரு விருந்தினனாக நடத்திய விதம் என்னை நெகிழ வைத்தது.

நம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் ஏமாற்றப்படுவார்கள், ஏமாற்றுபவர்கள் இன்னொருவரை தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பழகுவார்கள்.

பழக்க வழக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையும் தாருங்கள்.






Read more...

October 4, 2008

"இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீடு..


கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழரின் முழுமையான வரலாறு" நூல் வெளியீட்டு விழா "தகவல்" சஞ்சிகையின் ஆசிரியர் திருச்செல்வம் தலைமையில் ஸ்காபரோ நகர மண்டபத்தில் ( கனடாவில்) ஐப்பசி 3ம் திகதி வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது.

ctc_banner_book_release

இரு குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி மாணவியின் கனடிய தேசிய கீதம் என்பவற்றை தொடர்ந்து கனடிய தமிழர் சம்மேளனத்தின் இயக்குனர் ஒருவர் வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து ஆசிரியரின் பாடசாலை நண்பன் வேலா ஆசியுரை வழங்கினார். அவர் தன் உரையில் " ஆசிரியர் பாடசாலை நாட்களில் எவ்வளவு தூரம் வரலாறு சம்மந்தமான துறையில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தது மட்டும் நின்றுவிடமால் அதன் துறை சார் கல்வி பெற்று அவுஸ்திரேலியாவில் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் இருந்தார். அந்த வேலையை துறந்து தன் குடும்பத்தையும் பிரிந்து பல மாதங்கள், வருடங்களை தமிழரின் வரலாறு பற்றிய தேடலை செய்தார்.

book_rls 024

இதற்காக நம் நாட்டை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் ஆவணங்களை தேடி அதை மொழி பெயர்ப்பு செய்து பல சிரமங்களின் மத்தியில் தான் இந்த நூலை வெளியிட்டுள்ளார். இவர் தேசியத்தின் சொத்து என்று கூறும் போது அவை நிறைந்த கைதட்டுக்கள் அதன் உண்மைத் தனமை ஆமோதித்து நின்றது."

book_rls 030

தலைவர் திருச்செல்வம் தனது உரையில், இப்படியான வரலாற்று நூல்கள் எழுதுவதிலுள்ள சிரமங்கள், நிதி தேவைகள் என்பவற்றை விளக்கி இந்நூலின் வெளியீட்டுக்காக 10,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸை வழங்கிய பேருக்கு பொருத்தமான அம்மையார் "கற்பகம்" அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்படியான நூல்களை எல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகத்தை கடனாக தரமுடியாவிட்டாலும் பணத்தை கடனாக தர இங்கு நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று புத்தகத்தை வேண்டுவதற்கான உந்துதலை கொடுத்தார். நேரக்குறைவினால் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


book_rls 048

அதைத் தொடர்ந்து பேசிய நக்கீரன், நூல்களை ஆக்குவதிலும், சந்தைப்படுத்தல், மக்களை வாசிக்க வைத்தல் போன்றவற்றிலுள்ள சிரமங்களை நகைச்சுவையுணர்வுடன் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். ஆலய‌த்திற்கு தேர் செய்ய 35,000 டாலரை கொடுக்க முன் வருபவர்கள் இப்படியான நூல் வெளியீடுகளில் பங்களிக்க முன் வருகின்றார்களில்லை என்று தன் வருத்தத்தை வெளியிட்டார்.

book_rls 053

ஆய்வுரை நிகழ்த்திய நவம், ஈழத்து இடம் பெயர்வினை விளக்கும் ஓர் கவிதையை வாசித்துவிட்டு ஆய்வுரைக்குள் சென்றார். பொதுவாக ஆய்வுரை செய்பவர் நூலை முழுதாக படித்து முடித்தததிற்கான தொனிப்பை கொடுப்பார்கள். நவமும் தனது பார்வையிலுள்ள கருத்துக்களை முன் மொழிந்தார். இந்த வரலாற்று நூல் எல்லோரையும் சென்றடைவதற்கான முயற்சியில் ( வேற்றினத்தவர் உட்பட) சில முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சில முன்னுதாரணங்களை முன் வைத்தார். பிரபல்யமான பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டிருந்தால் நிறைய மக்களை சேர்ந்தடைய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். முன்னுரை, ஆய்வுரை போன்ற விளக்க உரைகள் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினால் தரப்பட்டிருந்தால் நூலுக்கு மேலும் சிறப்பு தந்திருக்கும் என்று கூறினார். புத்தகத்தில் ஒர் முத்திரை தலை கீழாக போடப் பட்டிருப்பதாகவும் சுட்டி காட்டினார். அத்துடன் நின்று விடாமல் புத்தகத்தில் ஆழமாக கையாளப்பட்ட விதம், எல்லோரும் படிக்கவேண்டிய முக்கியத்துவத்தையும் கூறி சேரனின் ஒரு கவிதையுடன் முடித்துக் கொண்டார்.

book_rls 074

ஏற்புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தனது ஏற்புரையில், ஆய்வுரை நிகழ்த்திய நவம் எழுப்பியிருந்த வினாக்களுக்கு விளக்கம் தந்தார். புத்தகத்திலுள்ள எல்லா விடயங்களுக்கும் தான் தன்னுடைய கருத்துக்களையே முன் வைத்ததாகவும், தன்னுடைய பதிப்பகத்தில் தான் பதிவு செய்ததாகவும் சொன்னார். நாம் எம்மில் நம்பிக்கை வைக்கவேண்டும் கேம்பிற்ட்ஜ் பதிப்பகம் போன்ற பெரிய பதிப்பகங்களை நம்பித்தான் நாம் எம் நூலை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது. காலனித்துவ ஆட்சியில் வாழ்ந்த மனப்பாங்கு தான் எங்களை அப்படி சிந்திக்க வைக்கின்றது என்று விளக்கமளித்தார்.
முத்திரை தலைகீழாக முதற் பிரசுரத்தில் இருக்கும் தவறை அடுத்த பிர்சுரத்தில் சரி செய்து கொள்வதாக கூறினார்.
ஈழத்தமிழனின் வரலாற்று பின்னணியல் அனுராதபுரம், கதிர்காமம், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி எல்லாம் தமிழனின் ஆட்சியில் இருந்ததாகவும், நம்மினம் நமது நிலச் சொத்துக்களின் உறுதியை பாதுகாப்பாக பூட்டிவைத்து ஓரங்குலம் நிலம் கூட‌ மற்றவர்களிடம் சென்று விடக்கூடாது என்று ஆயுதம் எடுத்து அடிபட்டுக் கொண்ட சமுதாயம் இப்போது தன் நாட்டை பறிகொடுத்து விட்டு நிற்கின்றது தன் நாடு என்று தெரியாமல்.
தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தை தான் சந்தித்த போது, அவரிடம் , அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னணியில் புலிகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அதனால் உங்களுக்கு அவர்களின் தலைவர் மீது கோபம் இல்லையா என்று வினவிய போது, தேசியத் தலைவர் ஒருவர் தான் எந்த சந்தர்ப்பந்த்தத்திலும் விலை போகாத தலைவன் என்று சொன்னதாக கூறினார்.

வீட்டுக்காரன் வெளியிலிருந்து வரும் நாய்க்கு சாப்பாடு போட்டாலும், வீட்டு நாய் அதனை சாப்பிட விடாமல் கலைக்குமாம். வெளி நாய் சொல்லிக் கொள்ளுமாம் எம் இனத்திற்கு ந‌ம் இனமே எதிரி என்று சுவாரசியமாக எமது இன்றைய நிலைமையை விளக்கினார்.

கெலிகொப்டரில் மணமகன் அல்லது மணமகளை அழைக்கின்ற வரைக்கும் புலம் பெயர்ந்த தமிழன் சென்று தன் பணத்தை விரயம் செய்கின்றான். அங்கு குண்டு மழைக்குள் தவிக்கும் மக்களுக்கும் அங்கு தன்னுயிரை தியாகம் செய்யும் போரளிகளையும் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள் என்று உணர்வு ததும்ப பேசினார். புத்தகம் குறைந்த விலையில் பிரசுரிக்க விரும்பி இந்தியா சென்று அங்கு அவர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அதன் பின் ஜேர்மனில் தான் புத்தகம் பிரசுரிக்கப் பட்டதாம்.

book_rls 039

அவர் உரை மிகவும் சுவாரசியமாகவும், தகவல்கள் நிறைந்ததாகவும், உணர்பூர்வமாகவும் இருந்தது. தனது புத்தகம் விற்பதற்கு நேரம் இல்லாவிட்டாலும் தான் இந்த சந்தர்ப்பத்தில் தனது உரையை முழுதாக வைக்க வேண்டும் என்று முயன்றார். நேரப் பற்றாக் குறையினால் தொடரமுடியால் நிறுத்திக் கொண்டார். தலைவர் போதும் என்ற மன நிலையில் வீடு செல்வதை விட, இன்ன‌மும் வேண்டும் என்ற மன நிலையில் விடை பெற்றால் தான் சிறப்பு என்று சொல்லி வந்திருந்தவர்களை தேற்றினார். வானம் பாடிகளின் மூத்த பாடகர் நம்மூரையும் தலவரையும் வாழ்த்தும் இரு பாடல்களை பாடி சென்றார். புத்தகங்கள் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழியிலும் விற்பனைக்கிருந்தன. நல்ல ஒரு நிகழ்வில் கல்ந்து கொண்ட ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டது. புத்தகத்தை வாசித்து விட்டு மீதியை சொல்கின்றேன்.







Read more...
Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP